districts

img

தோழர் என்.சங்கரய்யா, கவிஞர் தமிழ்ஒளி நினைவு கருத்தரங்கம்

மன்னார்குடி, டிச.18 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கிளை சார்பாக தோழர் என்.சங்கரய்யா மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நினைவு தின கருத்தரங்கம் மன்னார்குடியில் நடை பெற்றது. கிளைத் தலைவர் கே.வி. பாஸ்கரன் தலைமை வகித் தார். கிளைச் செயலாளர் தியாக சிவசுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ஜி.வெங்கடேஷ் கருத்தரங்க முன்னுரை யாற்றினார். மாவட்டப் பொருளாளர் மு.செல்வ ராஜ் சங்கரய்யா நினைவு கவிதையை வாசித்தார். ‘தமிழ்ஒளி எனும் மக்கள் பாவலர்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில செயற்குழு உறுப்பி னர் பேரா. இரா.காமராசு உரையாற்றினார். ‘சங்க ரய்யா ஒரு சகாப்தம்’ என்ற  தலைப்பில் தமுஎகச மாநில துணைப் பொதுச் செய லாளர் கவிஞர் களப்பிரன் உரையாற்றினார். கிளை பொருளாளர் கவிஞர் சரஸ்வதி நன்றி கூறினார்.  கவிஞர் பொன்முடி நிகழ்ச்சியை ஒருங்கிணைத் தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர்.