districts

img

சரக்கு ரயிலுக்கு மட்டுமே முன்னுரிமை தண்டவாளத்தில் ரயில் பயணிகள் மறியல்

 காஞ்சிபுரம், மார்ச் 5 - காஞ்சிபுரம்-செங்கல்பட்டு இடையே சரக்கு ரயிலுக்கு மட்டுமே முன்னுரிமை தருவதாக கூறி பயணிகள் குற்றம்சாட்டி தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.   திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே செங்கல்பட்டு வழியாக பயணி கள் ரயில் மற்றும் சரக்கு ரயில் சென்று வருகிறது. திருமால்பூரிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் பயணிகள் ரயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள்  பயணிக்கின்றனர். அரசு மற்றும் தனியார்  தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள், மாணவர்கள்மற்றும் மருத்துவ  சேவைக்காக இந்த  ரயிலை பெரிதும் பயன் படுத்தி வருகின்றனர்.  இது மட்டுமில்லாமல் வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலை யங்களில் சரக்குகளை கையாள முனையங் களும் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம்  தென்னக ரயில்வே கோடிக்கணக்கான ரூபாயை வருமானமாக ஈட்டி வருகிறது.  இந்நிலையில் சரக்கு ரயிலுக்கு அதிக  முக்கியத்துவம் தரும் வகையில் பயணி கள் ரயில்களை நிறுத்தி தாமதப்படுத்தி விடுவதாக தொடர் குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் செவ்வாயன்று (மார்ச் 5)  காலை 6:15க்கு இயக்கப்பட வேண்டிய  பயணிகள் ரயில் 7 மணி வரை இயங்காத  நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள்   பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்ற  னர். இதனை தவிர்க்க இரு வழிப்பாதை  திட்டத்தை செயல்படுத்தவும், காஞ்சிபுரம்-செங்கல்பட்டு இடையே இரு வழிப்பாதை திட்டத்தை உடனடியாக அமல்படுத்தி பயணிகள் விரைவு சேவையை பெற ஆவணசெய்யவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.  இந்த போராட்டத்தையொட்டி ரயில்வே  பாதுகாப்பு படையினர் மற்றும் காஞ்சிபுரம் காவல்துறையினர் பயணிகளுடன் பேச்சு நடத்திய பின் பயணிகள் ரயில் புறப்பட்டுச் சென்றது.