புதுக்கோட்டை, அக். 16- புதுக்கோட்டை போஸ் நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யம் சார்பில் கட்டப்பட்டுள்ள குடி யிருப்புப் பகுதிக்கு கூடுதல் தொகை செலுத்த எதிர்ப்புத் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை நகராட்சிக்குள் பட்ட போஸ்நகரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 384 வீடு கள் கட்டப்பட்டு ஏழை, எளியோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடக்கத் தில் இதற்காக ஒவ்வொருவரும் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தியிருந்தனர். தற்போது முழுமையான கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், இந்த வீட்டுக்கான தொகை ரூ. 1.50 லட்சமாக உயர்த்தப்பட்டு அதற்கான அரசாணைகளும் முறைப்படி பிறப்பிக்கப்பட்டன. கூடுதல் தொகை ரூ. 50 ஆயிரத்தை செலுத்த முடியாது என குடியிருப்புவாசிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், போஸ்நகர் குடியிருப்புவாசிகள் ஞாயிற்றுக் கிழமை இரவு இந்தக் கூடுதல் தொகை செலுத்துவது குறித்து கூடிப் பேசி யுள்ளனர். அப்போது, இந்த வார்டு உறுப்பினர் (அதிமுக) சுமதியின் கணவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் வந்துள்ளனர். மீத முள்ள தொகையை செலுத்தியாக வேண்டும் என பன்னீர்செல்வமும் கூறியதாகத் தெரிகிறது. அந்தப் பகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலராக இருக்கும் சிவராஜ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அங்கு நடந்த வாக்குவாதங்களை சிவராஜ் தனது கைப்பேசியில் வீடியோ பதிவும் செய்துள்ளார். அப்போது பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் சிவராஜு வைத் தாக்கியுள்ளனர். இதனால் காய மடைந்த சிவராஜ் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டார். இந்த நிலையில், தகவலறிந்த மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியினர் பிருந்தாவனம் பகுதியில் இரவுஙர சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். அதிமுக பிரமுகர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் பேச்சுவார்த்தையில் தெரிவித்ததை அடுத்து போராட்டம் ஒத்திவைக்கப் பட்டது.