பெரம்பலூர், டிச.19 - பெரம்பலூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு சார்பில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆட்டோக்களு டன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு கோரிக்கை மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், “பெரம்ப லூர் மாவட்டத்தில் ஏற்கனவே சுமார் 400 -க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வரு கின்றன. இந்நிலையில், தற்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலமாக சிஎன்ஜி பொருத்திய வாகனங்களுக்கு புதி தாக ஆட்டோ பர்மிட் வழங்கப்பட உள்ள தாக கூறப்படுகிறது. புதிய ஆட்டோக்களுக்கு பர்மிட் வழங்கு வதன் மூலம் ஏற்கனவே உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே புதிதாக ஆட்டோக்களுக்கு பர்மிட் வழங்குவதை நிறுத்தி விட்டு, ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் ஆட்டோக்களுக்கு சிஎன்ஜி முறையில் மாற்றி கொள்ள அனுமதி வழங்க வேண்டும். மேலும், அதற்கான மானியத்தையும் அரச வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.