திருச்சிராப்பள்ளி, டிச.28 - ஓய்வூதியத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். 1 ஆம் தேதியே ஓய்வூதியம் வழங்க வேண்டும். 2015 நவம்பர் முதல் 2021 டிசம்பர் வரை வழங்கப்பட வேண்டிய பஞ்சப்படி உயர்வு நிலுவைகளை உடனே வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்றோருக்கு மருத்துவப்படி ரூ.300 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தமிழக முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு கொடுக்கும் போராட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திங்களன்று நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். போராட் டத்தை விளக்கி செயலாளர் சண்முகம், பொரு ளாளர் நடராஜன், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் செந்தமிழ் செல்வன் ஆகியோர் பேசினர். பின்னர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.