திருநெல்வேலி ,டிச. 20- நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணுவை சந்தித்து இந்திய மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் ஜாய்சன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் ஆகியோர் கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில், கடந்த 17ஆம் தேதி நெல்லை டவுன் சாப்டர் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் இறந்தும் , சில மாணவர்கள் படுகாயம் அடைந்து அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர் என்பது மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிந்ததே .எனினும் விபத்தில் பலியான மாணவர்கள் குடும்பத்திற்கு மற்றும் காயம்பட்ட மாணவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் .சம்பந்தப்பட்ட அனைத்து அரசு அதிகாரிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .காயம்பட்ட மாணவர்களின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.