பட்டுக்கோட்டை, ஏப்.30 -
தென்னையை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களின் பாதிப்பு அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து விவசாயி களுக்கு சூரப்பள்ளம் கிராமத்தில் சிறப்பு வயலாய்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் சூரப்பள்ளம் ஊராட்சி மன்றத் தலைவர் தங்கம், துணைத்தலைவர் மணிவேல், ஊராட்சி மன்ற உறுப்பினர் லதா ஜீவானந்தம் மற்றும் பல்வேறு கிராமங் களில் இருந்து 60க்கும் மேற்பட்ட தென்னை சாகுபடி விவ சாயிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ந.க. நல்லமுத்துராஜா, வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய பேரா. பாபு, பட்டுக்கோட்டை வேளாண் ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியர் முனைவர் சித்ரா ஆகி யோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டு, சிவப்புக்கூன்வண்டு, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மற்றும் வாடல் நோய் அறிகுறிகள்- அதைப் போக்குவதற்கான மேலாண்மை முறைகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து ரைக்கப்பட்டது.
தென்னையில் உர மேலாண்மை, நுண்ணூட்டச் சத்து இடுதல், காண்டாமிருக வண்டு மற்றும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள் குறித்த செயல் விளக்கங்கள் மற்றும் கருத்துக் கண்காட்சிகள் அமைக்கப் பட்டிருந்தது. முகாம் ஏற்பாடுகளை வேளாண் அலுவ லர்கள் அப்சரா, சன்மதி, விதை ஆய்வாளர் நவீன் சேவி யர், உதவி வேளாண் அலுவலர் ஜெயபாரதி, பட்டுக் கோட்டை வட்டார உதவி வேளாண் அலுவலர்கள் மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் முருகானந்தம் ஆகியோர் செய்திருந்தனர்.