மயிலாடுதுறை, செப்.2 - சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய் வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோ ருக்கு ரூ.5,00,000 (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதி யுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதல மைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார். 2022 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரை வரவேற் கப்படுகிறது. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம். தங்களது விண்ணப்பம் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக் காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவ ணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2022 ஆம் ஆண்டு சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 31.10.2022 என மயி லாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்துள் ளார்.