districts

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பம் வரவேற்பு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 2 - திருச்சி துவாக்குடிமலை, அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2022-2023 கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு  பட்டயப்படிப்பு (முழுநேரம், பகுதி நேரம்) மற்றும் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த  23.6.22 முதல் 8.7.22 வரை இணையதளம் மூலம் நடை பெறுகிறது.  இங்கு சிவில், மெக்கானிக்கல், மின்னியல் மற்றும் மின்ன ணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், கணினி யியல் மற்றும் சர்க்கரை தொழில்நுட்பவியல் ஆகிய பாடப்  பிரிவுகள் உள்ளன. மேலும் இக்கல்வியாண்டு முதல் அரசு  வேலைவாய்ப்பு பெற ஏதுவாக சிவில் (தமிழ் வழி), மெக்கா னிக்கல் (தமிழ் வழி) ஆகியவையும் புதிய தொழில்நுட்பம் மூலம் வேலை வாய்ப்பை அதிகப்படுத்திட மெக்கா னிக்கல் என்ற புதிய பாடப்பிரிவும் இக்கல்லூரியில் துவங்கப் பட்டுள்ளது.  மாணவர்கள் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு  இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்தால், முதலா மாண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். பகுதி  நேரத்திற்கு 10, 12, ஐடிஐ 2 வருட அனுபவம் பெற்றிருக்க  வேண்டும். நேரடி இரண்டாமாண்டிற்கு 12 மற்றும் ஐடிஐ  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத் தினை https://skilltraining.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் ஜூலை 8 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பதிவுக் கட்டணமாக ரூ.150-ஐ விண்ணப்பதாரர் இணைய தள வாயிலாக செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் பதிவுக்  கட்டணம் செலுத்த அவசியமில்லை. மேலும் விபரங்களுக்கு:  அலுவலக தொலைபேசி எண்.: 0431-2552226. முதலாமாண்டு  சேர்க்கைக்கு: 9443694964, 9843863477, 9751314711. நேரடி  இரண்டாமாண்டு சேர்க்கைக்கு: 9976483718, 9443544615  என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி  மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.