tamilnadu

கோவை: பட்டாசு கடை உரிமத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு - மாவட்ட ஆட்சியர்

கோவை, செப். 19- கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதி களில் தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத் திட,  தற்காலிகப் பட்டாசு உரிமம் பெற்றிட இணை வழியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, 2020 ஆம் ஆண்டில்  தீபாவளி பண்டிகை எதிர் வரும் நவம்பர் 14 ஆம் தேதி அன்று கொண் டாடப்படவுள்ள நிலையில், கோவை மாவட் டத்தின் ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட் டாசுக் கடைகள் நடத்திட விருப்பம் உள்ள வர்கள், கடந்த ஆண்டை தொடர்ந்து இந்த ஆண்டும் இணையவழியாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்படி உரிமத்தினைப் பெறுவதற்கென, தற்காலிகமாக பட்டாசு விற்பனை உரிமம் கோரும் புலம் 9 ச.மீ முதல் 25 ச.மீ வரை உள்ளடக்கியதாகவும், புலத்தினை குறிக் கும் புலவரைபடத்தில் சாலை வசதி, சுற்றுப் புறத்தன்மை மற்றும் கடையின் கொள்ள ளவு ஆகியவற்றினை தெளிவாக குறிப்பிட் டுக் காட்டும் புலவரைப்படம், உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் மனுதார ராக இருப்பின், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்புநிதி ஆண்டில் வீட்டுவரி செலுத்திய ரசீது நகல், வாடகைக் கட்டி டம்  எனில்,

உரிமையாளர் வீட்டுவரி செலுத் திய அசல் இரசீது நகலுடன், கட்டிட உரிமை யாளரிடம் ரூ.20க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மதக் கடிதம், உரிய தலைப்பின் கீழ் அரசுக் கணக்கில் உரிமம் கட்டணம் ரூ.500- அசல் செலுத்து  சீட்டு, மனு தாரரின் மார்பளவு பாஸ்போர்ட் அளவுள்ள வண்ணப் புகைப்படம் -1.,

மனுதாரரின் அசல் நிரந்தர கணக்கு எண், ஆதார் கார்டு, குடும்ப அட்டை, ஸ்மார்ட் கார்டு ஆகிய ஆவ ணங்களுடன் கூடிய தங்களது விண்ணப் பத்தினை 10.10.2020- ஆம் தேதிக்குள், இ- சேவை மையங்கள் மூலம்  விண்ணப்பிக்கு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை தவ றாது கடைபிடிக்க விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மேலும், மேற்குறிப்பிட்ட காலக்கெடுவிற்குப் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும், நிபந்தனைகள் கடைப் பிடிக்காத விண்ணப்பங்களும் நிர்வாக கார ணங்களினால் ஏற்றுக் கொள்ளப்படமாட் டாது என மாவட்ட ஆட்சியர் கு.இராசா மணி தெரிவித்துள்ளார்.