districts

img

தேசிய அளவிலான கபடி போட்டிக்கு பேராவூரணி அரசுப் பள்ளி மாணவி தேர்வு

தஞ்சாவூர், அக்.3-  தேசிய அளவிலான கபடி  போட்டிக்கு தேர்வு செய்யப் பட்டுள்ள அரசுப் பள்ளி மாண விக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றி யம், கழனிவாசல் கிரா மத்தைச் சேர்ந்தவர்கள் குமார் -  சங்கீதா தம்பதி. இவர்களது மகள் ஜனரஞ்சனி, பேரா வூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11  ஆம் வகுப்பு படித்து வரு கிறார்.  விளையாட்டில் ஆர்வ முடைய ஜனரஞ்சனிக்கு, உடற்கல்வி ஆசிரியர் ரெங் கேஸ்வரி, அன்னமேரி, நீல கண்டன், கபடி பயிற்சியா ளர் கார்த்திக் ஆகியோர் சிறப்பு பயிற்சி அளித்தனர். பல்வேறு இடங்களில் நடை பெற்ற கபடி போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், மாவட்ட  அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற ஜனரஞ்சனி,  தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றார்.  இதில், 17 வயதுக்குட் பட்டோர் பிரிவில், மாநில அணியில் பங்கேற்க ஜனரஞ்சனி தேர்வு செய்யப் பட்டுள்ளார். இதன் மூலம் தேசிய அளவிலான போட்டி யில், தமிழக அணி சார்பில் மாணவி ஜனரஞ்சனி பங் கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில், மாநில  அணிக்கு தேர்வு செய்யப் பட்டுள்ள மாணவி ஜனரஞ்ச னிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தனலெட்சுமி தலை மையில் பாராட்டு விழா  நடைபெற்றது. பேரூராட்சி  தலைவர் சாந்தி சேகர் முன்னிலை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற  உறுப்பினர் நா.அசோக் குமார், மாணவி ஜனரஞ்சனி,  கபடி பயிற்சியாளர் கார்த்திக் ஆகியோரைப் பாராட்டினர். உதவி தலைமை ஆசிரி யர் சுப.கார்த்திகேயன் மற்றும் உடற்கல்வி ஆசிரி யர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அம்பிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.