பெரம்பலூர்,பிப்.1- “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி ஆகியோர் வேப்பந்தட்டை வட்டத்திற் குட்பட்ட உடும்பியம் வரு வாய் கிராமத்திற்கு புத னன்று நேரில் சென்று அரசுத் திட்டங்களின் செயல் பாடு குறித்து கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். வேப்பந்தட்டை வட்டத் திற்குட்பட்ட உடும்பியம் ஊராட்சி மன்ற அலுவல கத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர், ஊராட்சி யில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். உடும்பியம் ஊராட்சியில் மக்க ளைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனடைந்த மாற்றுத்திறனாளி பயனாளி புவனேஸ்வரி வீட்டிற்கு நேரில் சென்ற ஆட்சியர், பயனாளிக்கு வழங்கப் படும் சிகிச்சைகள் குறித்தும், மாதந்தோறும் அவருக்கு தேவையான மருந்துகள் முறையாக கிடைக்கப்பெறு கிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். மாற்றுத்திற னாளி நபர், தான் வாடகை வீட்டில் இருப்பதாகவும், மாதாந்திர உதவித்தொகை அன்றி தனக்கு வேறு வரு மானம் ஏதும் இல்லை. ஆதலால் தங்குவதற்கு ஒரு வீடு வழங்கிடக்கோரினார். அவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு விரை வில் அரசின் திட்டங்கள் மூலம் சொந்த வீடு கட்டி தருவதற்கு ஏற்பாடு செய் யப்படும் என தெரிவித்தார். வேப்பந்தட்டை வட்டத்தி ற்குட்பட்ட உடும்பியம் வரு வாய் கிராமத்தில் பெறப் பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் 31 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.5.30 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும், 05 பயனாளிகளுக்கு பட்டா மாற்றுத்திற்கான ஆணைக ளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.