மதுரை, ஜன. 30- மூட்டா மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் வெகு ஜன அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் “தேசத்தை உருக் குலை க்க முனையும் யுஜிசி வரைவு அறிக்கை 2025” தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் மதுரை வடக்கு மாசி வீதியில் புதனன்று நடைபெற்றது. தலைவர் பேரா.அ.தி.செந்தாமரை கண்ணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.லெனின் வரவேற்று பேசினார். தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை மாநில ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் பேரா. அருணன், அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங் களின் மேனாள் தலைவர் பேரா.ஜேம்ஸ் வில்லியம் ஆகியோர் கருத்துரையாற்றினர். இதில் பங்கேற்ற பேராசிரியர் அருணன் பேசியதாவது: ஒன்றிய அரசின் யுஜிசி தற் போது வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் கொடூரமானது. விஷத்தன்மை வாய்ந்தது. தற் போதைய திட்டப்படி 3 பேர் கொண்ட தேடுதல் குழுவில் ஒரு வர் வேந்தரின் பிரதிநிதி. வேந்தர் யார் அவர் ஒரு ஆர்எஸ்எஸ் பிரதி நிதி. இரண்டாமவர் யுஜிசியின் பிரதிநிதி. இவரும் இந்துத்துவா வாதி தான். மூன்றாவது பிரதிநிதி பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர். முதல் இருவர் ஒன்றிய அரசின் முகவர்கள். மூன் றாவதாக உள்ளவர் கமிட்டியில் மைனாரிட்டி. மைனாரிட்டியால் எது வும் செய்ய முடியாது. துணை வேந்தரை மோடியும், உயர்கல்வித் துறை அமைச்சரும் தான் நிய மிக்கப் போகிறார்கள். இவர்கள் நிச்சயம் இந்துத்துவாவாதிகளா கத்தான் இருப்பார்கள். இவர்கள் கல்வி நிலையங்களைக் கைப் பற்றுவார்கள். துணைவேந்தருக்கு கல்வி யாளர்கள் மட்டுமே தேர்வு செய் யப்படுவர். இதை மாற்றி தொழில் துறையைச் சார்ந்தவர்கள் என யார் வேண்டுமானாலும் வரலாம் என் கின்றனர். ஒரு கம்பெனியின் நிர்வாகி துணைவேந்தராக நிய மிக்கப்பட்டால் அவர் கல்வியின் தரம் பற்றிக் கவலைப்பட மாட்டார். அவருடைய சிந்தனையெல்லாம் வாரத்திற்கு 90 மணி நேரம் எப்படி வேலை வாங்குவது என்பதைப் பற்றித் தான் இருக்கும்.
துணைவேந்தர்கள் எந்த மாநி லத்தைச் சேந்தவர்களாகவும் இருக்கலாம். வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழக பல்க லைக்கழகங்களுக்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்டால் பல்கலைக் கழ கங்களின் தனித்தன்மை பறி போகும். தமிழின், தமிழரின் பண் பாடு, வரலாறு குறித்து எதுவும் தெரியாது. தமிழ் சார்ந்து ஆய்வ றிக்கை சமர்ப்பிப்பவர்களிடம் புண்ணிய நதிகள் பற்றி ஏன் ஆய்வு செய்யக்கூடாது எனக் கேட்பார் கள். குறிப்பாக கல்விப் புலத்தி லிருந்து பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்பால் இந்துத்துவாவாதி களை கண்டுபிடிக்க முடிய வில்லை. இதற்காகத்தான் கொள் கையை மாற்றுகிறார்கள். அப்ப டியே கல்விப் புலத்திலிருந்து கிடைத்தாலும் அவர்கள் இடதுசாரி களாக, திராவிட கொள்கை சார்ந்த வர்களாக, அம்பேத்கரிய கொள்கை சார்ந்தவர்களாக இருந்துவிடு வார்களோ என்ற அச்சம் உள் ளது. 1950-ஆம் ஆண்டு இந்திய அர சியல் சாசனம் நடைமுறைப்படுத் தப்பட்டது. அப்போது கோல்வால் கர் பல மாநிலங்கள் இணைந்த இந்தியா என்பது தேவையல்ல. நமக்குத் தேவை ஒற்றை ஆட்சி முறைதான் எனக் கூறினார். அதா வது ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ப தில் அவர் அன்றைக்கே உறுதி யாக இருந்தார். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதைப் போல பல்க லைக் கழகங்களையும் அவர்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி நடைபெறுகிறது. இது மாநிலங்களின் உரிமையை மட்டுமல்ல, மாநிலங்கள் என்ற அமைப்பையே சிதைப்பதாகும். பல்கலைக்கழகங்களை என்னிடம் கொடுங்கள். அதை என் குடும்பம் போல் பாதுகாக்கிறேன் என்கிறார் பிரதமர் மோடி. மோடி யின் கையில் பல்கலைக் கழகம் என்ற குடும்பம் சிக்கினால் என்னவாகும். இவர்களின் சிந்தனை ஆபத்தா னது. புதிய வரைவுக் கொள்கை யை தமிழ்நாடு, கேரளம், கர்நாட கம் மாநிலங்கள் எதிர்க்கின்றன. அனைத்து மாநிலங்களும் தங்க ளது எதிர்ப்பை வெளிப்படுத்தி தங்களது மாநில உரிமைகளை, கல்வி உரிமையைப் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். ஜேம்ஸ் வில்லியம்ஸ் பேசுகை யில், பாஜகவின் நோக்கம் கல்வி யில் வகுப்புவாதத்தை புகுத்து வது மட்டுமல்ல, கல்வியை முழு மையாக வணிகமயமாக்குவது தான். மாநிலங்களின் ஆளுநர்கள் தான் வேந்தர்கள். இவர்கள் மூலம் மாநில அரசின் உரிமைகள் பறிக் கப்படுகின்றன. வாஜ்பாய் பிரத மராக பொறுப்பேற்றவுடன் உயர் கல்வி குறித்து ஆலோசிக்க ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழு வில் கல்வியாளர்கள் ஒருவர் கூட இல்லை. மாறாக முகேஷ் அம்பானி, பிர்லா ஆகியோர் நிய மிக்கப்பட்டனர். அப்போதே இவர் களின் நோக்கம் தெளிவாகிவிட் டது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக நியமனங்களில் பேராசிரியர்களிடமிருந்து பட்டி யல் கேட்டுப் பெறுவதற்குப் பதில், தமிழக பாஜக தலைவர் அண்ணா மலையிடமிருந்து பட்டியலை கேட்டுப் பெறுகிறார். கல்வியின் கட்டமைப்பை மேம்படுத்துவது இவர்கள் நோக்கமல்ல. மாறாக, பல்கலைக்கழகங்களில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை திணித்து அதை ஏற்க வைப்பது; ஏற்றுக்கொண்டவர்களை அணி திரட்டுவது தான் பாஜகவின் நோக் கம் என்றார்.