மயிலாடுதுறை, ஏப்.3- மயிலாடுதுறையை அச்சுறுத்தும் சிறுத் தையை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் அச்சமின்றி வருகின்றனர். மயிலாடுதுறை நகரில் செம்மங்குளம் என்ற பகுதியில் செவ்வாயன்று இரவு சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். இதையடுத்து அப்பகுதியில் சிறுத் தையின் கால் தடம் இருந்தது உறுதியா னது. தொடர்ந்து, சிசிடிவி பதிவுகளை பார்த்த தில் அதில் சிறுத்தையின் நடமாட்டம் தென் பட்டது. செம்மங்குளம் அருகில் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடத்தில் வனத்துறையினர், காவல் துறை யினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே நிலைமையின் விபரீதம் புரியாமல், சிறுத்தையை வேடிக்கை பார்ப்ப தற்காக நகரின் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் இரு சக்கர வாகனத்தில் சம்பவ இடத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சாலையின் இரு புறத்திலும் கயிறு கட்டி, அவர்களை உள்ளே நுழைய விடா மல் காவல் துறையினர் தடுத்துள்ளனர். ஆனால், அந்த தடுப்பையும் மீறி உள்ளே நுழையும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து அப்புறப்படுத்தி வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வனத்துறை ரேஞ்சர் ஜோசப் டேனியல், “சிறுத்தையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சிறுத்தை பதுங்கி இருக்கும் இடம் உறுதி செய்யப்பட்ட பின்னர், உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து அதனை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள பொது மக்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுட னும் இருக்க ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப் பட்டு வருகிறது” என தெரிவித்தார். மயிலாடுதுறை நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், பொதுமக்களி டையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.