திருவாரூர், ஏப்ரல்.18-
ரேஷன் பொருட்கள் வாங்க மாதத்திற்கு ஆறு முறை மக்கள் அலைகின்ற னர். மக்கள் நலன் கருதி கடைகளில் கூடுதல் பணியா ளர்களை நியமிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சிப் பகுதியில் உள்ள ரேசன் கடைகளின் நிலையை மேற்கோள் காட்டி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் டி.ஜி.சேகர் விடுத்துள்ள அறிக்கை:-
குடவாசல் பேரூராட்சிக் குட்பட்ட அண்ணா தெற்கு வீதி, கிராம நிர்வாக அலு வலர் அலுவலகம் அருகே மற்றும் அத்திக்கடை பகுதி யில் உள்ள ரேஷன் கடை களில் கடந்த இரண்டு மாதங் களாக ரேஷன் கடைகளில் நிரந்தரப் பணியாளர்கள் இல்லை. வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் கடை இயங் கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. இதனால் பொருட் கள் வாங்கச் செல்லும் மக்கள் கடையில் கூட்டம் அதிகமாக இருப்பதால் நீண்ட நேரம் காத்திருந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த இரண்டு மாதமாக ரேஷன் கடையில் பருப்பு வகைகள் இல்லாததால் பருப்பு வகைகள் மற்றும் கோதுமை வாங்குவதற்காக மக்கள் நான்கு,ஐந்து முறை ரேஷன் கடைக்கு செல்லும் நிலை உள்ளது. தற்போது கடுமையான வெயில் உள்ள தால் வயதானவர்கள் ரேஷன் கடை பொருட்கள் வாங்க செல்லும் போது அவதிக்குள்ளாகின்றனர்.
கடையில் தற்காலிகப் பணியாளர்கள் மட்டுமே இருப்பதாலும், குறிப்பிட்ட நாட்கள் மட்டும் கடை திறப்பதால் மாதத்தில் ஒரு முறை சென்று வாங்க வேண்டிய பொருட்களை ஐந்து, ஆறு முறை சென்று வாங்கும் நிலை உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப ரேஷன் கடைகளை திறப்ப தற்குப் பதில் பணியில் உள்ள பணியாளர்களின் எண் ணிக்கையும் குறைக்கப் பட்டுள்ளது.
ஒரு ரேஷன் கடைக்கு மூன்று பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். பருப்பு மற்றும் கோதுமை தானியங்கள் குடும்ப அட்டைதாரருக்கு தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும்.