districts

img

கட்டுமாவடிச் சந்தையில் மீன் வாங்க குவிந்த மக்கள்

அறந்தாங்கி, ஜன.15 - அறந்தாங்கியை அடுத்த கட்டுமாவடியில் மாட்டுப் பொங்கலையொட்டி, மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்க பொது மக்கள் குவிந்தனர். இதனால் அறந்தாங்கி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி யில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு 15- க்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடை கள் செயல்படுகின்றன. இந்த மீன் மார்க்கெட் டிற்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்ன கரம், புதுக்குடி, சேதுபாவாசத்திரம், மந்திரிப் பட்டினம் போன்ற பகுதிகளில் நாட்டுப்படகு மூலம் பிடிக்கப்படும் மீன்களும், கோட்டைப் பட்டினம், ஜெகதாப்பட்டினம், மல்லிப்பட்டி னம் போன்ற பகுதிகளில் விசைப்படகுகள் மூலம் பிடிக்கப்படும் மீன்களும் விற்ப னைக்கு வருகின்றன.  அதுமட்டுமில்லாமல் இராமநாதபுரம், பாம்பன், இராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகப் பட்டினம், காரைக்கால் போன்ற பகுதிகளி லிருந்து சரக்கு வாகனங்கள் மூலம் தினமும் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த மீன்களை வாங்குவதற்கு திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை போன்ற பல்வேறு பகுதி களிலிருந்து மீன் வியாபாரிகள் சரக்கு வாக னங்களில் தினமும் வந்து செல்கின்றனர். ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புவதால் மீன் வரத்து அதிகமாக இருக்கும். இந்நிலையில் மாட்டுப்பொங்கல் தினமான புதனன்று, மீன்களை வாங்கு வதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கட்டு மாவடி மீன் மார்க்கெட்டில் குவிந்தனர். இதே போன்று கோழி மற்றும் ஆடு இறைச்சி  கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி யது.  அதிகாலை 4 மணி முதல் கட்டுமாவடி யில் மக்கள் கூட்டம் அதிகமாக நிரம்பி வழிந்த தால் பரபரப்பாக காணப்பட்டது. இதனால்  மூன்று மணி நேரத்திற்கு மேலாக அறந் தாங்கி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.