districts

கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்

தஞ்சாவூர், ஆக.25 -

    திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக, ஆய்வுக்கு வந்த மேலாண் இயக்குநரை முற்றுகையிட்டு, கூட்டுக் குடிநீர் திட்டத்தை அப்பகுதியில் செயல்படுத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.  

   தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே வடுகக்குடியில் கொள்ளிடம் ஆற்றில்,  மூன்று போர்வெல் அமைத்து, திருவாரூ ருக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர்  கொண்டு செல்வதற்காக திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கான பணிகளை துவங்கு வது தொடர்பாக வெள்ளிக்கிழமை தமிழ்நாடு  குடிநீர் வடிகால் வாரியம் மேலாண் இயக்கு நர் தட்சிணாமூர்த்தி, வட்டாட்சியர் பழனி யப்பன் மற்றும் பொறியாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வந்தனர்.

    இதையறிந்த வடுகக்குடி, ஆச்சனூர், மரூர் ஊராட்சிகளைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள், கிராம மக்கள் ஆய்வுக்காக வந்த அலுவலர்களை முற்றுகையிட்டு, கூட்டுக்  குடிநீர் திட்டத்தை இப்பகுதியில் செயல்படுத் தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாக்குவா தத்தில் ஈடுபட்டனர்.  அதிகாரிகள் அவர்களை  சமாதானம் செய்து, மக்களிடம் கோரிக்கை களை கேட்டனர்.

    அப்போது, தங்கள் பகுதியில் ஏற்கனவே,  குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. குறிப்பாக, 25 அடிக்கு கீழே பாறை இருப்ப தால், தண்ணீர் கிடைப்பது மிகவும் அரிதாகி  விடும். இந்நிலையில், கூட்டுக் குடிநீர் திட்டத்தை  செயல்படுத்தினால், வறட்சி ஏற்படும் அபா யத்தை உருவாக்கி விடும் என மேலாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தியிடம் பொது மக்கள் தெரிவித்தனர்.

    அவர்களின் கோரிக்கையை அரசின் கவ னத்திற்கு கொண்டு செல்வதாக அரசு அலுவ லர்கள் உறுதியளித்த நிலையில், அங்கிருந்து  பொதுமக்கள் கலைந்து சென்றனர். இருப்பி னும், கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல் படுத்தினால், அறவழியில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் தெரிவித் துள்ளனர்.