திருச்சிராப்பள்ளி, நவ.29- மக்கள் கோரிக்கைகளை நிறை வேற்ற பணம் இல்லை என கார ணம் கூறி, கோரிக்கைகளை நிறை வேற்றாமல் மாதக்கணக்கில் கிடப் பில் போடுவதை அதிகாரிகள் கை விட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புற நகர் மாவட்டக் குழு வலியுறுத்தி உள்ளது. சுத்தமான, சுகாதாரமான, குடி நீர் தங்கு தடையின்றி தினந்தோறும் வழங்க வேண்டும். பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரி மரா மத்து செய்ய வேண்டும். ரேசன் கடைகளில் அனைத்துப் பொருட்க ளையும் விநியோகம் செய்ய வேண் டும். தண்ணீர் தொட்டி அமைத்து தர வேண்டும். நூறு நாள் வேலை திட் டத்தில் அனைவருக்கும் முழுமை யாக நூறு நாள் வேலை வழங்க வேண்டும். பட்டா வழங்கியவர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். மக் கள் கோரிக்கைகளை நிறைவேற்ற பணம் இல்லை என காரணம் கூறி, கோரிக்கைகளை நிறைவேற்றா மல் மாதக்கணக்கில் கிடப்பில் போடுவதை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட மக்க ளின் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டக் குழு சார்பில் புறநகர் பகு திகளில் கடந்த அக்டோபர் 6 அன்று, 227 இடங்களில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல இடங்களில் அதிகாரிகள் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்த இடத்திலேயே சில கோரிக்கைகள் அதிகாரிகளால் நிறைவேற்றப்பட்டன. சில இடங்க ளில் போலீசார் சட்டம், ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அனுமதி மறுத்தனர். இருந்தபோதி லும் மக்கள் அடிப்படை பிரச்சனை களுக்கான ஆர்ப்பாட்டம் வெற்றி கரமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த 15 நாட்களாக மக்கள் கோரிக்கை களை விளக்கி வீடு, வீடாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் துண் டுப் பிரசுரம் கொடுத்து போராட்டத் திற்கான தயாரிப்பு பணிகளை செய்தனர். இதனை தொடர்ந்து, கட்சியின் 400-க்கும் மேற்பட்ட கிளைகள் ஒன்றுகூடி அந்தந்த ஒன்றியங்க ளில் நிறைவேற்றப்படாத கோரிக் கைகளை வலியுறுத்தி ஒன்றிய தலைநகரங்களில் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப் பட்டது. அதனடிப்படையில், முதற்கட்ட மாக திருவெறும்பூர் ஒன்றியம் காந்தலூரில் இலவச வீட்டுமனை பட்டா கொடுத்து, அதற்கு இது வரை வீட்டுமனை கொடுக்காததை கண்டித்தும், உடனே வீட்டுமனை வழங்க வேண்டும். காவிரி கூட்டுக் குடிநீர், மயான சாலை வசதி, தீய ணைப்பு நிலையம், நீதிமன்றம் அமைத்துத் தர வலியுறுத்தி திரு வெறும்பூர் வட்டார வளர்ச்சி அலு வலர் அலுவலகம் முன்பு செவ் வாய்க்கிழமை போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு திருவெறும் பூர் ஒன்றியச் செயலாளர் மல்லிகா தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். போராட்டத்தில் திருநங்கை கள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற் றனர். அப்போது, கடந்த 10 வரு டங்களுக்கு முன் வாளவந்தான் கோட்டை பகுதியில் 25 திருநங்கை களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இது வரை வீட்டுமனை வழங்கப்பட வில்லை. இவர்களுக்கு உடனடி யாக வீட்டுமனை வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் மனு கொடுக் கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உடனடியாக 15 பேருக்கு இடம் வழங்குவது என்றும், மீதமுள்ள 10 பேருக்கு பின்னர் வீட்டுமனை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதில் பாத்திமா தலைமையில் 25 திரு நங்கைகள் கலந்து கொண்டனர். இதேபோன்று 30 மாற்றுத்திற னாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி வீட்டுமனை வழங்கா ததை கண்டித்து மாற்றுத்திறனாளி கள் சங்க மாவட்டத் தலைவர் சித்ரா தலைமையில் அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. போராட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் முருகேசன், தெய்வநீதி, மாநகர மூத்த தோழர் கே.சி.பாண்டியன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் லெனின், ஒன்றிய மூத்த தோழர் கணேசன், ஜமுனா உள்பட ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.