திருச்சிராப்பள்ளி, ஜன.10 - 6 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள், போக்குவரத்து ஓய்வூதியர்கள், புத னன்று 2 ஆவது நாளாக டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்க ளில் ஆர்ப்பாட்டம், மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாநகர சிஐடியு மற்றும் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் புதனன்று வேலைநிறுத்த ஆதரவு ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு மாநிலக் குழு உறுப்பினர் செல்வி தலைமை வகித்தார். சிஐ டியு மாவட்டச் செயலாளர் ரெங்க ராஜன் உள்ளிட்ட பலர் சிறப்புரை யாற்றினர். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சந்திரன் நன்றி கூறினார். புதுக்கோட்டை புதன்கிழமை புதுக்கோட்டை யில் நடைபெற்ற மறியல் போராட் டத்திற்கு அண்ணா தொழிற்சங்க மண்டலப் பொருளாளர் கே.மாசி லாமணி, சிஐடியு நகரக் கிளை செய லாளர் எஸ்.அழகேந்திரன் ஆகி யோர் தலைமை வகித்தனர். போராட் டத்தில் புதுக்கோட்டை மண்ட லத்திற்குட்பட்ட கிளைகளில் இருந்து 426 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அண்ணா தொழிற்சங்க மண்டலப் பொதுச் செயலாளர் எஸ். செபஸ்தியான், சிஐடியு பொதுச் செயலாளர் ஆர்.மணிமாறன், ஏஐடி யுசி பொதுச் செயலாளர் டி.எம்.கணேசன், சிஐடியு மாநில செயலா ளர் ஏ.ஸ்ரீதர் மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, பொருளா ளர் எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அறந்தாங்கி பேருந்து நிலை யம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், சிபிஎம் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் கவிவர்மன், அதிமுக நகரச் செயலாளர் ஆதி மோகனகுமார் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர். பொன்னமராவதி அரசு போக்கு வரத்து பணிமனை முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே, சிஐடியு மத்திய சங்கத் தலைவர் காரல் மார்க்ஸ், ஏஐடியூசி துணைச் செயலாளர் துரை.மதிவாணன், அண்ணா தொழிற்சங்க பேரவை நீலகண்டன் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநில செய லாளர் சி.ஜெயபால், மூத்த தலை வர் ஆர்.மனோகரன், ஏஐடியூசி மாநிலச் செயலாளர் ஆர்.தில்லை வனம், கே.அன்பு, வெங்கடேசன், ராமசாமி (சிஐடியு), ஓய்வூதியர் சங்கம் ஞானசேகரன், பாஸ்கரன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோன்று கும்பகோணம் மண்டல போக்குவரத்து கழகம், புதுக்கோட்டை மண்டல போக்கு வரத்து கழக, இரண்டு டெப்போ வாயிலிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாநில துணைத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற் சங்கத்தினரை, காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர்
திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத் தின் கிளை நிர்வாகி அம்பேத்கர் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே. என். அனிபா உள்ளிட்டோர் பங்கேற்ற னர். நன்னிலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ். வைத்தியநாதன் தலைமை வகித்தார். மன்னார்குடி பணிமனை மற்றும் தேரடியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தேரடியில் சிஐடியு அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பின் சார்பில் நடந்த ஆர்ப்பாட் டத்திற்கு ஜி.ரகுபதி தலைமை வகித்தார். இதேபோன்று நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், அனைத்துத் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் புதன்கிழமை மாலை தற்காலிகமாக வாபஸ் பெறப் பட்டது.