districts

img

ஓய்வூதியர்கள் சங்க மண்டலப் பயிற்சி

திருவாரூர், ஏப்.22-

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டக்குழு சார்பில் மண்ட லப் பயிற்சி முகாம் திருவாரூர் ஊரக வளர்ச்சி  அலுவலக சங்க கட்டிடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

   திருவாரூர் மாவட்டத் தலைவர் எஸ். தமிழ்செல்வன், தஞ்சை மாவட்டத் தலை வர் எஸ்.பால்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். நாகை மாவட்டச் செயலாளர் பி.மனோகரன் முன்னிலை வகித்தார். மாநில தணிக்கையாளர் எஸ்.புஷ்பநாதன் வர வேற்றார். மாநிலச் செயலாளர் ச.கோமதி நாயகம், மாநிலத் தலைவர் ச.ராமமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை யின் மாவட்டத் தலைவர் என்.வசந்தன், மாவட்டச் செயலாளர் கே.எஸ்.செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

   ஓய்வு பெறும் நிலையில் உள்ளோர் தொடர்பான ஆண்டு தணிக்கையினை முன்னுரிமை அளித்து மேற்கொள்ளுதல் வேண்டும், ஊராட்சி ஒன்றியப்பணி ஓய்வூதி யர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்  செயல்படுத்த வெளியிடப்பட்ட அரசா ணையை தாமதமின்றி விரைவாக அமல்படுத் திட வேண்டும். காப்பீட்டுத் திட்ட அடை யாள அட்டை உடன் வழங்கிடல் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.