districts

ஓய்வூதியர் சங்க ஆலோசனை கூட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 3-

    தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின்  ஆலோசனை கூட்டம் திருச்சி புத்தூரில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.

   கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சிராஜூதீன்  தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மதிவாணன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாநிலச் செயலாளர் செந்தமிழ்செல்வன், மருத்துவ காப்பீடு, 2023 ஓய்வூதியர் நேர்காணல் குறித்து ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில்  நேரிடையாக சென்று நேர்காணல் நடத்துவது, குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்குவது குறித்து விளக்கிப் பேசினார்.  வருமானவரி பிடித்தம் மற்றும் தாக்கல் செய்வது குறித்து இணைசெயலாளர் ரவீந்திரநாத் பேசினார்.

   தன லெட்சுமி சீனிவாசன் மருத்துவர் எழில் மருத்துவ ஆலோச னைகளை வழங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சின்ன சாமி வரவேற்றார். துணைத்தலைவர் குருநாதன் நன்றி கூறி னார். சென்னையில் நடைபெற உள்ள தமிழ்நாடுஅரசு ஓய்வூதி யர் அனைத்துத்துறை மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.