வாடிக்கையாளரிடமிருந்து சட்ட விரோதமாக பெற்ற ரூ.1.35 லட்சத்தை வட்டியுடன் திருப்பி செலுத்துக! தனியார் வங்கிக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு
அரியலூர், அக்.26- அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள நக்கம் பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் மனைவி லலிதா(46). கடந்த 2020 ஆம் ஆண்டு இவர், அரியலூர் ஈக்விட்டாஸ் வங்கியில் ரூ.4.66 லட்சம் வீட்டுக் கடன் பெற்றி ருந்தார். அதற்கு அடமானமாக தன்னுடைய வீட்டுப் பத்தி ரத்தை அந்த வங்கியில் கொடுத்துள்ளார். லலிதா கடந்த 13.4.2022 அன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கடன் ஒப்பந்த விதிகள் மற்றும் காப்பீட்டு விதிகளின் படி கடன் பெற்றவர் உயிரிழந்து விட்டால் மீதமுள்ள தவ ணைகளை காப்பீட்டு நிறுவனம் செலுத்த வேண்டும். ஆனால் ஹெச்டிஎப்சி நிறுவனம் காப்பீட்டுத் தொகையைச் செலுத்தவில்லை. ஆனால் ஈக்விட்டாஸ் வங்கி தரப்பில் கொளஞ்சி நாதன் மற்றும் அவரது மகன்களை மீதி தவணைகளைக் கட்டுமாறு கேட்டு தொடர்ந்து கட்டாயப்படுத்தியதால் அவர்கள் கடந்த மார்ச் மாதம் வரை 11 மாதத் தவணைத் தொகையை செலுத்திவிட்டனர். இதுகுறித்து லலிதாவின் கணவர் கொளஞ்சிநாதனும், அவரது மகன்களும் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் கடந்த மே மாதம் வழக்குத் தொடர்ந்த னர். வழக்கை விசாரித்த வந்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், ஈக்விட்டாஸ் வங்கியும், ஹெச்டிஎப்சி காப்பீட்டு நிறுவனமும் சேர்ந்து லலிதா பெயரில் செய்தி ருந்த அடமான ஒப்பந்தத்தை ரத்து செய்தும், அவரது வீட்டுப் பத்திரங்களை 30 நாள்களுக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும், சட்டவிரோதமாகப் பெற்ற 11 தவணைத் தொகைகள் ரூ1,35,850-}ஐ வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும்.மேலும் அவர்களுக்கு நஷ்ட ஈடாக ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
கும்பகோணம் அருகே 2 ஆயிரம் கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
கும்பகோணம், அக்.26- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமரு தூர் உட்கோட்டத்தில் உள்ள சோழபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையின ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சோழபுரம் உதவி ஆய்வாளர் சற்குணம் மற்றும் போலீசார் சந்தேகம்படும்படியான வீட்டை சோதனை செய்தபோது, அதில் 2 ஆயிரம் கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கைப்பற்றினர்.இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேதுபாவாசத்திரம் அருகே கார் கவிழ்ந்து மூதாட்டி பலி
தஞ்சாவூர், அக்.26 - சேதுபாவாசத்திரம் அருகே கார் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மூதாட்டி பலியானார். மதுரையை சேர்ந்த அந்தோணிராஜன்(50) தமது மனைவி சகாயராணி(45) மகன் ஜெரோம்(15) மாமியார் சூசைமேரி ஆகியோருடன் வேளாங்கண்ணி சென்றார்.பின்னர் செவ்வாய்க்கிழமை கிழக்கு கடற்கரை சாலை வழியாக மதுரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். காரை அந்தோணிராஜன் ஓட்டி வந்தார். தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பிள்ளையார் திடல் சோதனைச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென தனது வாகனத்தை, இடப்பக்கம் திருப்பியுள்ளார். கார் அவர் மீது மோதாமல் இருப்பதற்காக, திருப்பிய போது எதிர்பாராதவிதமாக சாலையின் ஒரு பக்கம் இருந்த பாலத்தில் மோதி கவிழ்ந்தது. இதில், காரில் பயணம் செய்த 4 பேரும் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த சூசைமேரி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து, சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாச்சியார்கோயில் சீனிவாச பெருமாள் கோயில் திருக்குடமுழுக்கு விழா
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம். நாச்சியார்கோயில் சீனிவாசப் பெருமாள் திருக்கோயில் கி.பி.5-ம் நூற்றாண்டில் கோச்செங்கணான் என்னும் சோழ மன்னரால் கட்டப்பட்ட திருக்கோயிலாகும் 108 திவ்ய தேசத்தில் 14-வது திவ்ய தேசமாக கருதப்படு கிறது. திருவேங்கடத் திருப்பதிக்கு இணையாக பிரசித்தி பெற்ற பிரார்த்தனை வைணவத் திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ கல்கருட பகவான் மிகவும் பிரசித்தமானவர். மூர்த்தி, தலம், தீர்த்தம் சிறப்புடையது. திருமங்கையாழ்வாரால் 100 பாசுரங் களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருக்கோயி லாகும். அரசலாறு மற்றும் திருமலைராஜன் நதிகளுக்கு இடையே நறையூர் (தற்போது நாச்சியார் கோயில் என்று அழைக்கப்படுகிறது) என்னும் ஊரில் அமைந்துள்ளது, சைவ சமயத்தில் பிறந்த நாச்சியார் அம்மன் என்று சொல்லக்கூடிய வஞ்சுள வள்ளி இருக்கும் இடத்திற்கே வைணவ குல சீனிவாச பெருமாள் வருகை தந்து திருமணம் செய்து கொண்டு (வீட்டோடு மாப்பிள்ளையாக) இங்கே தங்கியதால் இந்த ஊரில் பெண்களுக்கு முதலிடமும் பெண்களை போற்றும் வகையில் பூஜைகள் இத்திருக்கோயிலில் நடைபெற்ற பிறகே அனைத்து விசேஷங்களும் நடைபெறும். ஆண்டுக்கு இரண்டு முறை பிரம்மோற்சவத்தில் நான்காம் நாள் திருவிழாவாக நடைபெறும் வீதியுலா புறப்பாடு உலகப்பிரசித்தி பெற்ற “கல்கருட சேவை” சிறப்புக்குரியது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் நான்கு பேர் மட்டும் கருவறையிலிருந்து சுமந்து வீதி உலாவின் போது 8 பேர் அடுத்து 16 பேர் என 126 பேர் தூக்கி செல்வது இந்த ஊரில் சிறப்பாகும். தொகுப்பு: சரவணன்
அக்.28,28 விடுமுறை கால அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கும்பகோணம், அக். 26- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் நிர்வாகம் சார்பில், அக்டோபர் 28 சனி, 29 ஞாயிறு வார விடுமுறையையொட்டி பொது மக்களின் வசதிக்காக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சா வூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைத் பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 100 பேருந்துகளும், திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 75 பேருந்துகள் என கூடுதலாக அக்டோபர் 27 மற்றும் வெள்ளி, 28 சனி நாட்களில் மொத்தம் 175 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 29 ஆம் தேதி, 30 ஆம் தேதிகளில் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப் பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரணியம், திரு வாரூர். மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், இராமநாதபுரத்தி லிருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்கு வரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பேருந்து சேவையை அளிக்க ஏதுவாகும் மற்றும் அனைத்து போக்கு வரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவு சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் www.tnstcin இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு என மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.
இன்று கோட்டைப்பட்டினத்தில் மனுக்கள் பெறும் முகாம்
புதுக்கோட்டை, அக்.26- புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், கோட்டைப்பட்டிணம் சரகம், கொடிக்குளம் வருவாய் கிராமத்தில் எதிர்வரும் 08.11.2023 புதன்கிழமை அன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு 27.10.2023 அன்று காலை 10.30 மணியளவில் மணமேல்குடி தாலுகா, கோட்டைப்பட்டி னம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து முன்மனுக்கள் பெறப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்கள் அளித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிணற்றில் விழுந்து விவசாயி பலி
நத்தம், அக்.25- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுப்பட்டி ஊராட்சி பஞ்சயம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி கண் ணன் (48). இவர் தனது தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அருகில் இருந்த 60 அடி ஆழ தண்ணீர் உள்ள கிணற்றில் தவறி விழுந்து பலியானார். நத்தம் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் சடலத்தை மீட்டு கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.