புதுச்சேரி, மே 12-
ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வராதோர் மற்றும் சிவப்பு குடும்ப அட்டை இல்லாத நோயாளி களுக்கு உயர் சிகிச்சைகளுக்கு அறிவிக்கப்பட்ட கட்டண அறிவிப்பை ஜிப்மர் ஒத்திவைத்துள்ளது.
கடந்த மார்ச் 16ஆம் தேதி 63 வகையான உயர் சிகிச்சை களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப் படும் என சுற்றறிக்கை வெளியானது. ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வராத மற்றும் ஏழை களுக்கான சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளி டமிருந்து பயன்பாட்டு கட்டணங்கள் வசூலிக்கப்படும் என ஜிப்மர் அறிவித்தது. மேலும் உயர் சிகிச்சைகளுக்கு ரூ.500 முதல் ரூ. 12 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 16.3.2023ஆம் தேதி வெளியிடப்பட்ட சேவை கட்டண சுற்றறிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.