தஞ்சாவூர், ஏப்.17- தஞ்சாவூர் மாநகர, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கட்சி உறுப்பினர் ரசீது வழங்கும் விழா ஞாயிறன்று நடை பெற்றது.
மாநகரச் செயலாளர் வடிவேலன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் ‘‘கட்சி உறுப்பினர்கள் கட மைகள்’’ குறித்து உரை நிகழ்த்தினார். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, கட்சி உறுப்பினர்களுக்கு ரசீது களை வழங்கி சிறப்புரை யாற்றினார். நகரக்குழு உறுப்பினர் கரிகாலன் நன்றி கூறினார்.
விழாவில், துணைக்குழு உறுப்பினராகத் தன்னைப் பதிவு செய்துகொண்ட சாய் சித்ரா, தீக்கதிருக்கான ஓர் ஆண்டு சந்தாவை மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி யிடம் வழங்கினார். (ந.நி.)