புதுக்கோட்டை, நவ.24 - புதுக்கோட்டை மாவட் டம் கந்தர்வகோட்டை ஒன்றி யம் மஞ்சப்பேட்டை கிரா மத்தில் பகுதிநேர அங்கா டியை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். கந்தர்வகோட்டை ஒன்றி யம் மஞ்சப்பேட்டை கிரா மத்தில் பகுதிநேர அங்காடி திறக்க வேண்டுமென்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாளையக் கோரிக்கையாக இருந்துவந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச் சாரத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எம். சின்னதுரை, ‘தான் வெற்றி பெற்றால் பகுதிநேர அங்காடி திறக்க நடவடிக்கை எடுப் பேன்’ என உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மஞ்சப் பேட்டையில் பகுதிநேர அங்காடி திறக்கப்பட்டது. அங்காடியை திறந்து வைத்து சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில், திமுக வடக்கு மாவட்டச் செய லாளர் கே.கே.செல்லப் பாண்டியன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. ராமையன், திமுக ஒன்றி யச் செயலாளர் மா.தமி ழய்யா, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.சித்திரை வேல் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.