districts

img

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து வாகன நிறுத்தப் போராட்டம்

புதுக்கோட்டை, டிச. 10 - பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை  உயர்வுக்கு எதிராக ஒன்றிய மோடி அரசைக்  கண்டித்தும் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலி யுறுத்தியும் சிஐடியு, தமிழ்நாடு விவசாயி கள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் டிச.10 (வெள்ளிக்கிழமை) பத்து நிமிடம் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்திற்கு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ.ஸ்ரீதர், விதொச மாநில  பொருளாளர் எஸ்.சங்கர், தீண்டாமை ஒழிப்பு  முன்னணி மாவட்டத் தலைவர் சி.அன்புமணவா ளன் உள்ளிட்டோர் நான்கு சக்கர வாகனங்க ளுடன் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். அறந்தாங்கியில் நடைபெற்ற போராட்டத் திற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கவி வர்மன், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலி ஜின்னா ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற போராட்டங்களில் சிஐடியு மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பி ரமணியன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் ஏ.ராமையன், செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி, பொருளாளர் சி.சுப்பிரமணியன், விதொச மாநிலக்குழு உறுப்பினர் கே.சண்முகம், வாலி பர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கர்ணா, செய லாளர் துரை.நாராயணன், பொருளாளர் ஆர்.இள மாறன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா,  செயலாளர் டி.சலோமி, பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி. மாணவர் சங்க மாவட்டத் தலை வர் சந்தோஷ், செயலாளர் ஜனார்த்தனன், மாநிலக்குழு உறுப்பினர் ஓவியா உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். இந்த போராட்டத்தில் கறம்பக்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ  -மாணவிகள் பங்கேற்றனர்.

பொன்னமராவதி

பொன்னமராவதியில் 6 இடங்களில் நடை பெற்றது. பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன் தலைமை வகித்தார்.  பேருந்து நிலைய ஆட்டோ நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு எஸ். நல்லதம்பி, எஸ்.பாஸ்கர் தலைமை வகித்த னர். காந்தி சிலை முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு வாலிபர் சங்க ஒன்றிய பொறுப்பாளர் கே.குமார் தலைமை வகித்தார். செவலூரில் நடை பெற்ற போராட்டத்திற்கு ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் மணிமா றன் தலைமை வகித்தார். காரையூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் சிஐடியு அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்றனர். சடையம்பட்டியில் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ராமசாமி தலை மையில் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் வெள்ளைப் பிள்ளையார் கோயிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாக னங்களில், ஊர்வலமாகச் சென்று, பழைய பேருந்து நிலையம், முதன்மைச் சாலையில் வாகன நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்செல்வி, மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி, மாவட்டத் தலைவர்  அர்ஜூன், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே.அன்பு,  எஸ்.செங்குட்டுவன், முறைசாரா தொழிலா ளர்கள் சங்கம் மாவட்டச் செயலாளர் பி.என். பேர்நீதி ஆழ்வார், கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் இ.டி.எஸ்.மூர்த்தி, டாஸ்மாக் ஊழியர் சங்கம் மாவட்டச் செயலாளர் வீரையன், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க மாவட்டத் தலைவர் முருகேசன், தரைக்கடை சங்க மாவட்டத் தலைவர் மணிமாறன், மாவட்ட  துணைச் செயலாளர் வடிவேலன், அரசு போக்கு வரத்து சங்கம் காரல்மார்க்ஸ், ராமசாமி, விரைவு போக்குவரத்து கழகம் பி.வெங்கடேசன், டிஆர்இயூ சங்கத் தலைவர் ரஜினி, ஆட்டோ சங்கத் தலைவர் விஜயகுமார், செயலாளர் கிரு ஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் பேரா வூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவை யாறு, பூதலூர், செங்கிப்பட்டி, திருக்காட்டுப்பள்ளி, வல்லம், திருச்சிற்றம்பலம், திருவையாறு உள்ளிட்ட 18 மையங்களில் நடைபெற்ற போராட் டத்தில் ஆயிரக்கணக்கானோர், தங்கள் வாக னங்களை ஆங்காங்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கும்பகோணம்

கும்பகோணத்தில் 10 மையங்களில் போரா ட்டம் நடைபெற்றது. கும்பகோணம் உச்சி பிள்ளை யார் கோவிலில் நடைபெற்ற போராட்டத்திற்கு  ஆட்டோ சங்க கவுரவத் தலைவர் செந்தில்குமார்,  செயலாளர் கார்த்திக் தலைமையிலும், பாலக் கரையில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டப் பொருளாளர் கண்ணன், வாலிபர் சங்க  பொறுப்பாளர்கள் ராமர், பிரபாகரன், மேம்பா லம் பகுதியில் அரசு போக்குவரத்து தொழிலா ளர் சங்க தலைவர் மணிமாறன், பொதுச் செயலா ளர் கோவிந்தராஜன், காந்தி பூங்காவில் ஓய்வூ தியர் சங்க அன்புமணி, ராஜ்மோகன், சுமதி, தாரா சுரத்தில் எவர்சில்வர் தொழிலாளர் சங்க பொறுப் பாளர்கள் செல்வம், மணிபாபு மற்றும் கும்ப கோணம் ஒன்றியத்தில் தேவனாஞ்சேரியில் உள்ளாட்சி தொழிலாளர் சங்க மாவட்ட செயலா ளர் ஜேசுதாஸ் தலைமையிலும், பாபுராஜ புரத்தில் விதொச தட்சிணாமூர்த்தி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் கலா தலைமையிலும் வாகன நிறுத்த போராட்டம் நடைபெற்றது. சிஐடியு திருவிடைமருதூர் ஒன்றிய பொறுப்பாளர் நாகேந்திரன் தலைமையில் நடை பெற்றது.  நாச்சியார்கோவில் கடைவீதியில் நடை பெற்ற போராட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க பொறுப்பாளர் பழனிவேல், சிஐடியு ஆனந்தன், வெண்புறா, ஆட்டோ, ஓம் சக்தி ஆட்டோ தொழி லாளர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

அரியலூர்

சிஐடியு சார்பில் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அரசு போக்குவரத்து கழக பணிமனை சிஐடியு கிளை தலைவர் முருகன் ஆகியோர் தலைமையில், அரியலூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில், சிஐடியு மாவட்ட துணை தலைவர் சந்தானம், பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் கந்தன், கிளை பொருளாளர் ஜோதி வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை 

மயிலாடுதுறை மாவட்டத்தில் 17 மையங் களில் 10 நிமிடம் வாகனங்கள் நிறுத்தி போராட் டம் நடைபெற்றது. மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, செம்பை, தரங்கம்பாடி, இலுப்பூர், சங்கரன்பந் தல், இளந்தோப்பு, ஸ்ரீகண்டபுரம், பெரம்பூர், மங்கைநல்லூர், கொள்ளிடம், மயிலாடுதுறை நகரப் பகுதிகளான கண்ணாரத்தெரு, பூக்கடைத் தெரு, கால்டாக்ஸ், கிட்டப்பா அங்காடி மற்றும் கட லங்குடி உள்ளிட்ட இடங்களில் நடந்த போராட்டத் தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்ப்புகளை தெரிவித்து முழக்கமிட்டனர். இந்திய தொழிற்சங்க மையம், விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்  உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

வேதாரண்யம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த  கரியாப்பட்டினம், தாணிக்கோட்டகம், மருதூர்  ஆகிய இடங்களில் போராட்டம் நடைபெற்றது. வேதாரணியம் தெற்கு ஒன்றிய விவசாய தொழி லாளர் சங்க தலைவர் வி.இளையபெருமாள், வாலிபர் சங்க தலைவர் பிரபு, மாதர் சங்க ஒன்றிய  தலைவர் வசந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். தலைஞாயிறு, வெள்ளப்பள்ளம், மணக்குடி  பகுதிகளிலும் நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராஜா, சிஐடியு பொறுப்பாளர்  வெற்றிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திருவாரூர்

திருவாரூரில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன் தலைமை வகித்தார். மாணவர் சங்க மாவட்ட செய லாளர் இரா.ஹரிசுர்ஜித், சிபிஎம் நகர செய லாளர் எம்.தர்மலிங்கம், சிஐடியு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த வாகன நிறுத்த போராட்டத்திற்கு வாகன ஓட்டிகளும், பொது மக்களும் ஆதரவு அளித்து பங்கேற்றது குறிப்பி டத்தக்கது. 

மன்னார்குடி

மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் நடை பெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.ரகுபதி, சிஐடியு இணைப்பு சங்க தலைவர்கள் ஜி.தாயுமானவன், டி.ஜெகதீசன், ஜி. முத்துகிருஷ்ணன், ஜி.மாரிமுத்து, ஏ.பி.தனுஷ் கோடி, பி.செந்தில்குமார், பி.மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

நன்னிலம்

நன்னிலம் ஒன்றியம் பேரளம் கடைவீதி யில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணை செயலாளர் எஸ்.வைத்தி லிங்கம் தலைமையேற்றார். சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே.எம்.லிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கொரடாச்சேரி ஒன்றியம் வெட்டாறு பாலம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.கே.எம்.அனிபா  தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க ஒன்றிய  செயலாளர் பி.பரமசிவம், சிஐடியு ஆட்டோ சங்க  மாவட்ட குழு உறுப்பினர் ஜி.முருகேசன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.இளங்கோ வன் தலைமை வகித்தார்.