அரியலூர், நவ.22 - ஜெயங்கொண்டம் அருகே பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டி டம் கட்டித் தர வேண்டுமென பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அடிக்காமலை கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வரு கின்றனர். இந்நிலையில் அக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 20- க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரு கின்றனர். ஒரே கட்டிடத்தில் செயல்படும் இப்பள்ளி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. பழமை வாய்ந்த கட்டிடம் என்பதால் ஆங்காங்கே பழுதாகி, கான்கிரீட் இரும்பு கம்பிகள் துருப்பிடித்து, சிமெண்ட் கற்கள் பெயர்ந்து அவ்வப்போது மாணவர்கள் மீது விழும் நிலை உள்ளது. மேலும் கட்டிடங் களுக்குள் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கிறது. மேலும், பள்ளி கட்டிட வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. பள்ளி கட்டிடத்தின் வளாக சுற்றுச்சுவர் எப்போது வேண்டு மானாலும் இடிந்து விழலாம் என்ற நிலை உள்ளது. பள்ளி கட்டிடம் இப்படி ஆபத்தான நிலை யில் இருப்பதால், பெற்றோர் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மனமின்றி அச்சத்துடன் உள்ளனர். தற்போது மழைக் காலம் என்பதால் மாணவர்கள் நடந்து வரு வதற்குக்கூட சரியான சாலை வசதி இல்லை. இப்படி பல்வேறு அடிப்படை வசதிகள் எது வும் இல்லாததால் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இதுகுறித்து பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கல்வி அலுவலர்கள் என பல அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இது வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இந்நிலையில் புதன்கிழமை அப்பகுதி யில் கனமழை பெய்ததால், பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து, மதிய உணவு இடைவேளை முடியும் வரை காத்திருந்து, தங்களது பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். மேலும் பழுதடைந்த பள்ளி கட்டி டத்தை அகற்றிவிட்டு, புதிய பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும். ஆபத்தான நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.