districts

img

பாபநாசம் ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம்

பாபநாசம், அக்.5- பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம்  ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில், திமுக உறுப்பினர் விஜயன் பேசும் போது,  ‘‘நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை  எடுக்க வேண்டும். மழைக் காலம் தொடங்குவதையொட்டி அனைத்து நீர் தேக்கத் தொட்டிகளையும் சுத்தம் செய்து,  சுகாதாரமான முறையில் தண்ணீர் வழங்க வேண்டும். டெங்கு பரவலைத் தடுக்க உரிய முன் எச்சரிக்கை நட வடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். அமமுக உறுப்பினர் சரவண பாபு பேசும் போது, ‘‘மேல  கபிஸ்தலத்தில் பேருந்து நிழற்குடையை குடி நீர் வசதி யுடன் ஏற்படுத்த வேண்டும். சருக்கை-பெருமாள் கோயில்  இடையிலான அரசலாற்றின் குறுக்கே உள்ள நடைபாலம்  சேதமடைந்துள்ளதால், புதிதாக கட்ட வேண்டும். சருக்கை யிலுள்ள சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும்’’ என்றார்.