பெரம்பலூர், பிப்.21- பெரம்பலூர் மாவட்டம் ஜமீன் பேரையூரில் அங்கன் வாடி மற்றும் தொடக்கப் பள்ளி இயங்கி வருகின்றன. இந்நிலையில், பள்ளி விளை யாட்டு மைதானத்தில், ஊரா ட்சி அலுவலகம் கட்டப் பணி கள் மேற்கொள்ளப்பட்டன. இதையறிந்த பொதுமக் கள், திமுக, சிபிஎம், காங்கி ரஸ், விசிக உள்ளிட்ட அனைத்து கட்சியினரின் தலைமையில் பள்ளிக்கூடத்தில் பஞ்சா யத்து அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், பிப்.21 அன்று பணிகள் மீண்டும் தொடங் கப்பட்ட நிலையில், அப் பகுதி மக்கள் அனைத்து கட்சியினருடன் இணைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். தக வலறிந்த குன்னம் காவல் துறையினர் பொதுமக்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அதிகாரி களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு பணிகள் நிறுத்தப்பட் டன. எனினும் பொதுமக்கள் ஒன்று திரண்டு பள்ளி அருகே கருப்பு கொடியுடன் உண்ணாவிரதப் போராட் டம் நடத்தினர்.