கும்பகோணம், ஜுன் 1-
திருவிடைமருதூர் வட்டம் வயலூரில் பல்லவர் கால சேத்ரபாலர் சிற்பம் மற்றும் நந்தியுடன் கூடிய கல்வெட்டு ஆகியன கண்டெடுக்கப் பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே வயலூ ரைச் சேர்ந்த ராமய்யன், வாய்க்காலிலிருந்து கண்டெ டுக்கப்பட்ட பெயர் தெரியாத சிலையை வைத்து வழிபாடு செய்து வருவதாக கும்பகோ ணம் அரசு மகளிர் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் மு.கலா-வுக்குத் தகவல் அளித் தார்.
இதையடுத்து, கலா மற்றும் பாண்டிய நாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய் வாளர்கள் செந்தில்குமார், ஸ்ரீதர் ஆகியோர் அங்கு சென்று சிலையை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து பேராசிரியர் மு.கலா கூறுகையில், “மூன் றடி உயரத்தில் பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள இந்தச் சிலை, பல்லவர் காலத்தைச் சேர்ந்த சேத்ரபாலர் என தெரிய வந்தது. சிலையின் 4 கரங்களில், வலது மேற்கரத் தில் உடுக்கை, இடது மேற்கரத்தில் பாம்பு, வலது முன்கரத்தில் சூலம், இடது முன்கரத்தில் கபா லம் உள்ளன. சேத்ரபாலர் சிலையின் தலையில் நீண்ட ஜடாபாரம், மகுடம், காதுகளில் பத்திர குண்டலங்கள், மார்பில் ஆபரணங்கள், முப்புரி நூல் ஆகியவற்றுடன் இடுப்பில் பாம்பை அணிந்த நிலையில் உள்ளது.
இந்தச் சிலை இப்பகுதி யில் இருந்த பல்லவர் காலத்து சிவன் கோயிலில் இருந்திருக்க லாம். அந்தக் கோயில் காலப் போக்கில் அழிந்திருக்கக் கூடும். இதை உறுதிப்படுத்தும் வகையில் சேத்ரபாலர் சிற்ப மும், ஒரு சிவலிங்கமும் அங்குள்ளன. மேலும், அதன் அருகி லிருந்த எல்லைக் கல்லாக பயன்படுத்தி வந்த கல்வெட்டை ஆய்வு செய்ததில், நாயக்கர் கால தமிழ் கல்வெட்டு ஒன்று காணப்பட்டது. அந்தக் கல் வெட்டில், ஒரு நந்தி (காளை), சூலம், மழு, கொடி போன்ற சிவ வழிபாட்டை குறிக் கும் வகையில் கல்லில் கோட்டு ருவாக செதுக்கப்பட்டுள்ளது.
அதில் 9 வரி கொண்ட பழங்கா லத்து எழுத்துக்கள் உள்ளன. அதில், “சர்வசித்தி வருடம் தை மாதம் ஐந்தாம் திரு நல்ல நாளில் முடி சூட்டிக் கொண்ட தன் பேரில் மாடு தானம் வழங்கப்பட்டுள்ளது’‘ என உள்ளது. இதில், முடிசூடியவரின் பெயர் சிதைந்து காணப்படு வதால், யாரென உறுதியாகக் கூற முடியவில்லை. இந்த எழுத் துகளை வைத்து ஆய்வு மேற்கொண்டபோது, தஞ்சா வூர் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவர்கள், சிவன் கோயி லுக்கு வழங்கப்பட்ட கொடை குறித்த கல்வெட்டாக இருக்க லாம்” என்றார்.