தஞ்சை மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல். மாதர் சங்க ஒன்றிய தலைவர் கண்ணகி ஆகியோரின் மகள் காயத்ரி மற்றும் சீதக்கமங்கலம் தையான் - வேலாயி மகன் அரவிந்தன் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா கும்பகோணம் அடுத்த செம்மங்குடியில் நடைபெற்றது. சிபிஎம் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோ.நீலமேகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன், திருவாரூர் மாவட்ட செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், அனைத்துக் கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.