தஞ்சாவூர், ஆக.14 -
தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணியை அடுத்த மனோராவில், பட்டுக்கோட்டை - பேராவூரணி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட மீனவ கிராம நிர்வாகிகள் மற்றும் மீனவர் சங்க நிர்வாகிகள் கலந்தாய்வு குறை கேட்புக் கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்திற்கு, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண் ணாதுரை தலைமை வகித்தார். நாட்டுப்படகு மீனவர் சங்க தலை வர் ஜெயபால் வரவேற்றார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திர சேகரன், தமிழ்நாடு மீனவர் நல வாரிய துணைத் தலைவர் ஏ.தாஜு தீன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.
கூட்டத்தில், “ஆக.18 அன்று இராமநாதபுரம் மாவட்டம் மண்ட பத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ளும் மீன வர் மாநாட்டில் பெருந்திரளாக கலந்து கொள்வது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களின் தலைவர்கள், பஞ்சாயத்துகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று முதல்வரிடம் வழங்குவது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி சட்டமன்ற உறுப்பினர்களிடம் மனுக்களை வழங்கினர். அப் போது ஏஐடியுசி தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சங்க மாவட்டச் செயலாளர் என்.காளி தாஸ் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது:
மாநில மீனவர் நல வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பொறுப் பாளர்கள் அனைவரும் விசைப் படகு மீனவர்கள். நாட்டுப் படகைச் சேர்ந்த மீனவர் ஒருவர்கூட நல வாரியத்தில் இடம்பெறவில்லை. எனவே நாட்டுப்படகு மீனவர் களை நல வாரியத்தில் இணைத் துக் கொள்ள வேண்டும். மன்னார் வளைகுடா பகுதியில், கடல் ஆழம் குறைந்த பகுதி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடைப்பட்ட பகுதியாகும்.
இது மீன்களின் இனப் பெருக்கத்திற்கு ஏற்ற பகுதி யாகும். கடல் சமவெளி பகுதியாக இருப் பதால் பல கிலோமீட்டர் இரட்டை மடி, சுருக்குமடி, ரேஸ் மடி போன்ற வலைகளை பயன்படுத்தி கடல் வளத்தையும், இயற்கை சூழ லையும் அழித்து வருகின்றனர். இத னால் மீன் குஞ்சுகள் பிடிபட்டு மீன் இனமே அழிந்து வருகிறது. எனவே, மீனவர்களின் வாழ்வாதா ரத்தை, மீன் வளத்தை பாதுகாக்க, பாக்ஜலசந்தி பகுதியை பாது காக்கப்பட்ட மீன்வள மண்டலமாக அறிவித்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர் சங்க நிர்வாகிகள், கிராம தலைவர்கள் கலந்து கொண்டனர். திமுக மீனவர் அணி தலைவர் முருகன் நன்றி கூறினார்.