தஞ்சாவூர், ஆக.8 -
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தஞ்சாவூர் மண்டலம் சார்பில், எதிர்வரும் கே.எம்.எஸ் பருவத்திற்கான நெல் கொள் முதல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு செயலாளர் முனைவர் டி.ஜெகநாதன் தலைமை வகித்தார். தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.
கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாது காப்பு துறை அரசு செயலாளர் முனைவர் டி. ஜெகநாதன் பேசுகையில், “எதிர்வரும் கே.எம்.எஸ் 2023-2024 நெல் கொள்முதல் பரு வத்தில், எவ்வித பிரச்சனைகளும் இன்றி நெல் கொள்முதல் பணி நடைபெற வேண்டும்.
நெல் கொள்முதலுக்கு தேவையான தளவாட சாமான்களை வேண்டிய அளவிற்கு இருப்பு வைக்க வேண்டும். விவசாயிகளிடமிருந்து எவ்வித சிரமமும் இன்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும், நேரடி நெல் கொள்முதல் நிலைய பணிகளை துரிதப் படுத்தி குறித்த காலத்தில் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் தலைமையின்கீழ் அலு வலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள் முதல் செய்யும் பணியினை, எந்தவிதமான புகாருக்கும் இடமின்றி செயல்படுத்த வேண்டும்” என அறிவுறுத்தினார்.