நாகர்கோவில், ஆக. 11
தண்ணீர் இல்லாமல் செண்பகரா மன் புதூர் அதை சுற்றியுள்ள பகுதி களில் உள்ள வயல்கள் வெடித்து நெற் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. அஞ்சுகிராமம் பகுதியில் பயிர் செய்த நெற்பயிர்களுக்கு தண்ணீர் விலைக்கு வாங்கி பாய்ச்சும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் கன்னி பூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடு பட்டு உள்ளனர். 6500 ஹெக்டேரில் இந்த ஆண்டு சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 5000 ஹெக்டேரில் மட்டுமே தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கன்னி பூ சாகுபடிக்காக கடந்த ஜூன் 1-ந்தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து சானல்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் கடைமடை பகுதி மக்களுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதனால் விவசாயிகள் பயிர் செய்த நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து சானல்களை தூர்வார வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பலகட்ட போராட்டங்கள் நடத்தினார்கள். மாவட்ட ஆட்சியரை சந்தித்தும் மனு அளித்தனர். இதன் அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் சானல்கள் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப் பட்டது.
இந்தநிலையில் தற்போது பறக்கை பகுதிகளில் கன்னிப்பூ சாகு படி செய்யப்பட்ட 3000 ஹெக்டேரில் நெற்பயிர்கள் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் செண்பகராமன் புதூர், அஞ்சுகிராமம் பகுதிகளில் பயிர் செய்த நெற்பயிர்கள் தண்ணீர் கிடைக் காமல் கருகும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது. நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதை அறிந்த தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.ரவி, மாவட்ட துணைச் செயலாளர் எஸ். விஜி கொண்ட குழு ஓன்று பொ துப்பணித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து நெற்பயிர்கள் கருகும் நிலை யில் உள்ள பகுதிகளை கண்டறிந்து, அந்த பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதே போல் சிற்றார் பட்டணம் கால்வாய் கடை மடை பகுதியிலும் பயிர் செய்யப் பட்ட நெற்பயிர்கள் பாதிக்கக்கூடிய நிலையில் உள்ளது. எனவே அந்த கால்வாயிலும் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் விவ சாய சங்க பிரதிநிதிகள் மாவட் அதிகாரி களை சந்தித்து மனு அளித்துள்ளனர்.