திருச்சிராப் பள்ளி, ஜன.8- மரவள்ளிக் கிழங்கை இடைத் தரகர்கள் “சிண்டி கேட்” அமைத்து விலை பேசி வாங்குவதால் பச்சமலை பழங்குடியின மக்களுக்கு நியாயமான விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பச்சமலை மலைப்பகுதியில் சுமார் 8,000 ஏக்கர் நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.
மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் பல நுட்பங்களை அறிந்தவர்கள் பழங்குடி மக்கள். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மலைப்பகுதியில் உரிய சூழல் நிலவுவதால் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. “சிண்டிகேட்” அமைத்துக் கொள்முதல் செய்வது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த மரவள்ளிக் கிழங்கு வியாபாரிகளுக்கும், பச்சமலையில் உள்ள இடைத்தர கர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் ஒவ்வொரு பழங்குடியினர் கிராமத்திற்கும் சென்று குறைவான விலைக்கு கொள்முதல் செய்கிறார்கள்.
இவர்களுக்கு உள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர் உதவி செய்வதாகவும் கூறப்படுகிறது. விவசாயிகளின் உற்பத்தியாளர் அமைப்பு, மரவள்ளிக் கிழங்கு மற்றும் பிற மலை விளைபொருட்களை கொள்முதல் செய்வதற்கான வசதிகளைக் கொண்ட டாப்செங்காட்டுப்பட்டிக்கு கொண்டு செல்வதற்குப் பதிலாக, இடைத்தரகர்கள் பொதுவாக விவசாயிகளை தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய ஈர்க்கிறார்கள்.
இடைத்தரகர்கள் விளைபொருட்களை குறைத்து எடைபோட்டு, நடைமுறையில் உள்ள விலையை தெரிவிக்காமல் விவசாயிகளுக்கு அவர்களின் விருப்பப்படி கொடுக்கின்றனர். மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் மையம் அமைந்துள்ள டாப்செங்காட்டுப் பட்டிக்கும் பச்சமலைக்கும் இடைப்பட்ட தூரம் 14 கி.மீ., விவசாயிகளுக்கு தங்கள் விளைபொருட்களை இடைத்தரகர்களுக்கு விற்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து நாங்கள் தொடர்ந்து அறிவுறுத்துகிறோம். கிட்டத்தட்ட 25 சதவீதம் முதல் 30 சதவீதப் பழங்குடி மக்கள் இடைத்தரகர்களை மீறி தங்கள் பொருட்களை விவசாயிகளின் உற்பத்தியாளர் அமைப்பு மூலம் விற்கிறார்கள்.
இருப்பினும், இடைத்தரகர்களின் பிடியில் இருந்து வெளியே வர முடியாமல் உள்ளவர்களும் இருக்கின்றனர் என்றார் பச்சமலை அங்கக விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பின் முதன்மை செயல் அதிகாரி ஜி.சுரேஷ்.