districts

img

புள்ளம்பாடியில் ஐம்பெரும் விழா: பெ.சண்முகம், எம்.சின்னதுரை எம்எல்ஏ பங்கேற்பு

திருச்சிராப்பள்ளி,பிப்.27 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியக் குழு சார்பில் தகைசால் தமிழர் தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு விழா,  தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர்  விருதுபெற்ற கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகத்திற்கு பாராட்டு  விழா, மாமேதை லெனின் நூற்றாண்டு நினைவு விழா, தேர்தல் நிதியளிப்பு விழா  மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் குடும்ப விழா ஆகிய ஐம்பெரும்  விழாக்கள் செவ்வாயன்று புள்ளம்பாடி யில் நடைபெற்றன. சங்கரய்யா உருவப்படம் திறப்பு விழாவிற்கு புள்ளம்பாடி ஒன்றியச் செயலாளர் ரஜினிகாந்த் தலைமை வகித் தார். ஒன்றியக்குழு உறுப்பினர் ஜார்ஜ் வர வேற்றார். மூத்த தோழர் கே.வி.எஸ்.இந்து ராஜ் மாமேதை லெனின் உருவப் படத்தை யும், சிபிஎம் கந்தர்வக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தகை சால் தமிழர் தோழர் என்.சங்கரய்யா உருவப் படத்தையும் திறந்து வைத்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரன்  துவக்கவுரையாற்றினார்.  கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப் பினர் எம்.சின்னதுரை, புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலப் பொரு ளாளர் பழநிசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மூத்த தோழர் எம்.கே. தங்கராசு, லூர்துசாமி, திமுக திருச்சி மத்திய மாவட்டச் செயலாளர் வைர மணி, மாவட்ட துணைச் செயலாளர் சித்தார்த்தன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலாளர் விடுதலைஇன்பன் உள்பட பலர் வாழ்த் துரை வழங்கினர்.   ரூ.2 லட்சம் கட்சி நிதி புள்ளம்பாடி ஒன்றியக்குழு சார்பில் கட்சி நிதியாக ரூ.2 லட்சத்தை புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலனிடம் வழங்கினர். பின்பு கட்சியின் புள்ளம்பாடி ஒன்றியக் குழு சார்பில், மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகத்திற்கு கேடயம்  வழங்கி பொன்னாடை போர்த்தி கௌர வித்தனர்.  பட்டியல் இனத்தைச் சேர்ந்த லால்குடி  ஒன்றியம் மகிழம்பாடி ஊராட்சிமன்றத் தலைவர் செல்லம்மாள், தனது பகுதி மக்க ளுடன் விழாவில் கலந்து கொண்டு, பெ. சண்முகத்திற்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தோழர் பெ.சண்முகம் ஏற்புரை ஆற்றினார். விழாவில், சிபிஎம், அனைத்து கட்சி யினர் மற்றும் புள்ளம்பாடி ஒன்றியத்தில்  வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட இருளர்  குடும்பத்தினர் கலந்து கொண்டனர். ஒன்றி யக்குழு உறுப்பினர் வினோத்குமார் நன்றி  கூறினார்.