தஞ்சாவூர், ஜூன் 11 -
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டா ரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திட்டக்குடியில், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திட்டக் குடி கிராம ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கிராம விவசாயி கள் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை வேளாண்மை அலுவலர் அப்சரா தலைமை வகித்துப் பேசுகையில், “சுற்றுச் சூழலை மனி தர்கள் பாதுகாப்பது மிக முக்கியம்.மரம் நட்டு சுற்றுச்சூழலை பாதுகாப் பது நமது ஒவ்வொரு வரின் கடமை” என்றார்.
சேதுபாவாசத்திரம் வட்டாரத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி கார்த்திக், அவர் சாகுபடி செய்யும் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்தும் அவர் பின்பற்றும் மேலாண்மை முறைகள் குறித்தும் இயற்கை விவ சாயம் பற்றியும் இயற்கை இடுபொருட்கள் தயா ரிப்பு மற்றும் பூச்சி விரட்டி கள் பற்றியும் விவசாயி களிடம் கலந்துரையாடி னார்.
வேளாண் அலுவலர் சன்மதி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை உதவி வேளா ண்மை அலுவலர் ஜெய பாரதி மற்றும் அட்மா திட்ட அலுவலர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.