திருச்சிராப்பள்ளி, செப்.10 - திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தான விழிப்பு ணர்வு மாரத்தான் போட்டி ஞாயிறன்று நடந்தது. “காவேரி மாரத்தான் திருச்சி 2023” போட்டியை திருச்சி காவேரி மருத்துவ மனை மற்றும் சிஐஐ மற்றும் ஒய்ஐஐ இணைந்து 8வது முறையாக நடத்து கிறது. உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த ஆண்டுக்கான கருப்பொருள். உடல் உறுப்பு தானம் செய்பவர்களை அதிகள வில் பதிவு செய்ய ஊக்குவிக்கவும், உடல் உறுப்பு தானம் பற்றிய தவறான புரிதல்களை களைவதும் இதன் நோக்க மாகும். 5 கி.மீட்டர் ஓட்டத்தை அமைச்சர் கே. என்.நேருவும், 10 கி.மீட்டர் ஓட்டத்தை திருச்சி மாநகராட்சி காவல் ஆணையர் காமினியும் தொடங்கி வைத்தனர். 21 கி.மீ தூர அரை மாரத்தான் ஓட்டத்தை விக்னேஷ் வித்யாலயாவில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தொடங்கி வைத்தார். இதில் 7000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் ரூ.3,00,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர் மணிவண் ணன் செல்வராஜ், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர் செங்குட் டுவன், காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக் குநர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.