districts

img

கரூர் அரசு மருத்துவமனை பணியாளரின் அலட்சியத்தால் மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழப்பு: இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

கரூர், ஜன. 13 - கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த மாற்றுத்திறனாளி சிறுவன் இரவு  பணியில் இருந்த பணியாளர்கள், மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்தார். அவரின் குடும்பத் திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கிட  மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கரூரை அடுத்துள்ள ராயனூரை சேர்ந்தவர் எஸ்.கணேசன், தையல் வேலை செய்து வருகிறார். இவருக்கு  ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை உள்ளனர். இதில் ஆண் குழந்தையான கே.வெங்கடேசன் (17). நடக்க மற்றும் வாய் பேச முடி யாத மாற்றுத்திறனாளி ஆவார்.  இவருக்கு உடல் நலக்குறைவு  ஏற்பட்டு கடந்த 30-11-2017 தேதி யன்று இரவு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச் சைக்காக அவசரப் பிரிவில் சேர்க்கப் பட்டார். பின்னர் ஆண்கள் பிரிவில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசனுக்கு சி.டி.ஸ்கேன்  எடுத்திட மருத்துவர்கள் பரிந்துரைத்த னர்.  ஆனால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சி.டி. ஸ்கேன் பழுதடைந்துள்ளதால் தனி யார் ஸ்கேன் சென்டர் அல்லது திருச்சி  மருத்துவமனைக்கு சென்று எடுத்து  வர அறிவுறுத்தியுள்ளனர். பொருளா தார பிரச்சனையில் உள்ள கணேச னால் தனியாருக்கு சென்று ஸ்கேன் எடுக்க இயலவில்லை. அதனால் திருச்சிக்கு சென்று ஸ்கேன் எடுக்க இருந்த நிலையில், 2.12.2017 (சனிக் கிழமை) இரவு முழுவதும் சிறுவன்  வெங்கடேசனுக்கு அதிக அளவி லான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அவரது தாய்,  இரவு பணியில் இருந்த செவிலியர்  கார்த்தியிடம் பலமுறை முறையிட் டுள்ளார். ஆனால் கார்த்தி அதனை காதில் வாங்காமல் செல்போனில் வீடியோ பார்த்துகொண்டு ,தண்ணீ ரில் துணியை நனைத்து ஒத்தடம் கொடுக்குமாறு அலட்சியமாக பதில்  கூறியுள்ளார்.  மேலும் சிறுவனின் காய்ச்சலை  குறைப்பதற்கு, இரவு நேர மருத்து வருக்கு தகவல் அளிக்காமலும், ஊசி,  மாத்திரைகள் வழங்காமலும் அலட்சியமாக இருந்துள்ளார். மருத்துவமனையில் உள்ளவர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டி யும், கோபத்துடனும் செயல்பட்டுள் ளார். கடுமையான காய்ச்சலால் வலிப்பு ஏற்பட்டு 3.12.2017 அன்று அதி காலை 6.30 மணிக்கு சிறுவன் வெங்க டேசன் உயிரிழந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தகவல் அறிந்து வந்த மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர்  நகரக் குழுவினர், சிறுவன் உயிரிழந் ததற்கு கடுமையான கண்டனம் தெரி வித்ததுடன், இதற்கு காரணமான ஆண் செவிலியர் கார்த்தி மீது நட வடிக்கை எடுத்திட வேண்டும் என்ற புகார் மனுவை மருத்துவமனையின் அதிகாரியிடம் அளித்தனர். மருத்துவ நிர்வாகம் செவிலியர் கார்த்தி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து பல கட்ட  போராட்டங்களை இந்திய ஜனநாயக  வாலிபர் சங்க நடத்தியது. இதன்  பின்னர் 2018 ஆம் ஆண்டு கணேசன்  மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து, மாநில  மனித உரிமை ஆணையம் விசா ரணை மேற்கொண்டு 11.1.2022 அன்று  பாதிக்கப்பட்ட வெங்கடேசன் குடும் பத்திற்கு இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செய லாளர் எம்.ஜோதிபாசு கூறியதாவது:  கரூர் ராயனூரை சேர்ந்தவர் கணே சன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் உள்ளார். இவரது  மாற்றுத்திறனாளி மகன் வெங்க டேசன், பணியாளர்களின் அலட்சியத் தால் உயிரிழந்தார். அவரின் உயிரி ழப்பிற்கு நியாயம் கேட்டு பல கட்ட போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கம் தொடர்ந்து நடத்தியது.  பின்னர் கட்சியின் திருச்சி மாநகர்  மாவட்டக் குழு உறுப்பினர் வழக்கறி ஞர் ரெங்கராஜன் மாநில மனித  உரிமை ஆணையத்தில் 3 ஆண்டு கள் வழக்கு நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு பெற்று தந்து, இந்த வழக்கில் வெற்றி  பெற்றுள்ளார். தனது மகனின் இழப்பிற்கு நியா யம் கேட்டும், அநீதிக்கு எதிராகவும் தொடர்ந்து போராட்ட களத்தில் நின்று  போராடிய கணேசனையும், இந்த  வழக்கிற்காக எந்தவித கட்டணமும்  பெறாமல் சட்டப் போராட்டம் நடத்திய  வழக்கறிஞர் ரெங்கராஜனுக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு தெரிவித்துக் கொள்கிறது.  இவ்வாறு அவர் கூறினார்.