districts

img

சந்தன மரம் கடத்தல் கும்பல் மீது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுக!

திருச்சிராப்பள்ளி, மே 3 - திருச்சி புறநகர் மாவட்டம் துறையூர் வட்டம் தளுகை பாதர்பேட்டையில் மாயம், மந்திரம் செய்யும் போலிச் சாமியார் அரசு  நிலங்களை வளைத்து போட்டு மடாலயம் என்ற பெயரில் பில்லி, சூனியம், ஏவல்,  வசியம் செய்யும் வேலைகளை செய்து வந்தார். அப்பாவி பெண்கள் ஏராளமானோர் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு நிலங்களை கைய கப்படுத்தவும், போலிச் சாமியாரின் மாயா லயத்தை அகற்றவும் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன்பேரில் கொல்லிமலை தாசில்தார், வருவாய்த் துறையினர் மாயா லயத்திற்கு சீல் வைத்தனர்.  சீல் வைக்கப்பட்ட மாயாலயத்தின் உள்ளே புகுந்த கும்பல் சாக்கு மூட்டைகளில் சந்தன  கட்டைகள் உள்ளிட்ட பொருட்களை அள்ளிக்  கொண்டு சென்றதை அப்பகுதி விவசாயிகள்  பார்த்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், வனத்துறையினர், அவர்கள் பதுக்கிய சந்தன கட்டைகளை பறிமுதல் செய்து இருவரை பிடித்து ரூ.50,000-ம் அபராதம் மட்டும் விதித்து விட்டு விட்டனர்.   இதன் பின்னணியில் உள்ள போலிச் சாமி யார் மற்றும் அவரது கும்பல் மீது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி துறை யூர் வனத்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு  விவசாயிகள் சங்க ஒன்றிய கவுன்சிலர் முத்துக் குமார் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.  கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பழநி சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட  தலைவர் ராமநாதன், மாவட்ட துணை தலைவர் முருகேசன், மாவட்ட துணை செய லாளர் குமார்,  தீண்டாமை ஒழிப்பு முன்னணி  மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துறையூர் ஒன்றிய செய லாளர் ஆனந்தன், உப்பிலியபுரம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும்  மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட னர். பின்னர் துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமையிடத்து துணைத்  தாசில்தார்  தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மாவட்ட ஆட்சியர் கவனத் திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முற்றுகை போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.