பெரம்பலூர், ஜன.13 - எளம்பலூர் கிராமத்தை பெரம்பலூர் நகராட்சி யுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் எளம்ப லூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்து மனு அளித்தனர். அம்மனுவில், “பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஊராட்சியில், கல் உடைக்கும் தொழிலாளர்கள், விவ சாயிகள், கட்டிட தொழிலாளர் ஆகியோர் வசித்து வரு கின்றனர். எளம்பலூரில் எந்த வணிக வர்த்தகமும் கிடையாது. இங்கு நூறு நாள் வேலையை நம்பியே அதிக குடும்பங்கள் உள்ளனர். விவசாயம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்நிலையில், எளம்பலூர் ஊராட்சியை பெரம்பலூர் நகராட்சியுடன் இணைப்ப தால் கிராமத்தைச் சேர்ந்த அனைவரின் வாழ்வாதார மும் பாதிக்கப்படும் ஆகவே மாவட்ட ஆட்சியர், தமிழக முதல்வர் கவனத் திற்கு கொண்டு சென்று எளம்பலூர் கிராம ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என தெரிவித்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் ஒன்றியச் செயலாளர் பெரிய சாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் கலையரசி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர், எளம்பலூர் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.