districts

தபால்துறையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு

தஞ்சாவூர், ஜூலை 19-

      தபால்துறையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு  வழங்கப்பட்டுள்ளது.

     இதுகுறித்து தஞ்சை கோட்ட முதுநிலை தபால்துறை கண்கா ணிப்பாளர் தங்கமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “இந்திய தபால்துறை மூலம் குறைந்த பிரீமியம் மற்றும் போனசுடன் தபால்  ஆயுள் காப்பீடு பாலிசி மற்றும் கிராமிய தபால் ஆயுள் காப்பீடு பாலிசி  சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பல்வேறு சூழல் காரணமாக பாலிசி தொடங்கிய வாடிக்கையாளர்கள், தங்கள் தவணைத் தொகையை உரிய காலத்தில் செலுத்த தவறி விடுவதால், அந்த பாலிசிகள் காலாவதியாகின்றன. காலாவதியான பாலிசிகளை அபராதத் தொகையுடன்தான் புதுப்பிக்க இயலும்.  

    தற்போது தபால் ஆயுள் காப்பீடு இயக்குநரகம், ஜூன் 1 முதல்  ஆகஸ்ட் 31 வரையிலான காலக் கட்டங்களில், தங்கள் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அபராத தொகை யில் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை (அதிகபட்சம் ரூ.2,500  முதல் ரூ.3,500 வரை) விலக்கு அளிக்கும் சலுகையை அறிவித்து உள்ளது.  

   மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகலாம். இந்த சலுகை ஆகஸ்ட் 31 வரை மட்டுமே அமலில் இருக்கும். எனவே, வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி காலாவதியான பாலிசிகளை சலுகை தள்ளுபடியுடன் புதுப் பித்துக் கொள்ளலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.