districts

மொஹரம் பண்டிகை: 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கும்பகோணம், ஜூலை 26 -

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்  (கும்பகோணம்) லிட் சார்பில் ஜூலை 29,  30 (சனி, ஞாயிறு) வார விடுமுறை மற்றும்  மொஹரம் பண்டிகையையொட்டி பொது மக்களின் வசதிக்காக, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக கும்பகோணம் அரசு போக்குவரத்து மேலாண் இயக்குநர் தெரி வித்துள்ளார்.

    இதுகுறித்து கும்பகோணம் அரசு போக்குவரத்து மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக் கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயி லாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப் பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராம நாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக் கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்ப கோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப் பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயி லாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப் பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராம நாதபுரம் ஆகிய ஊர்களுக்கும் 150 பேருந்து கள் இயக்கப்பட உள்ளன.

   திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப் பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய  இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சி யிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங் கண்ணி ஆகிய ஊர்களுக்கும் 100 பேருந்து கள் என மொத்தம் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

    அதேபோன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்க ளுக்கு திரும்பிச் செல்ல, ஜூலை 30  (ஞாயிறு) 31 (திங்கள்) ஆகிய நாட்களில்,  சென்னை தடத்தில் 150 சிறப்பு பேருந்து களும், பிறத்தடங்களில் 100 சிறப்பு பேருந்து களையும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

   மேலும் பயணிகள் வசதிக்காக, முக்கிய  பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவ லர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள் பணி யமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீர மைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் இப்பேருந்து வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.