பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் கொப்பனாபட்டியில் ரூ. 9.05 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தினை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜி.கருப்பசாமி, வருவாய் கோட்டாட்சியர் எம்.எஸ். தண்டாயுதபாணி, ஒன்றிய குழு தலைவர் சுதாஅடைகலமணி, ஊராட்சி மன்ற தலைவர் மேனகா மகேஸ்வரன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.