districts

img

வட்டாட்சியர் சமரசப் பேச்சுவார்த்தை சிறு காசாவயல் கிராமத்தில் 8 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த கோவில் திறப்பு

அறந்தாங்கி, ஜூன் 30 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள சிறு காசாவயல் கிராமத்தில்   சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ளது. இந்த கோவிலில், அப்பகுதியில் உள்ள  அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றுகூடி திருவிழா நடத்துவது வழக்கம். இங்கு கடந்த 2014 ஆம் ஆண்டு கோவில் திருவிழா நாடகம் நடந்த போது, பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் தலைமையில் 2017 ஆம் ஆண்டு  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. 8 ஆண்டுகளை கடந்த நிலையில், ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில், கிராம மக்கள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங் முன்னிலையில், கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, 8 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த கோவிலை திறந்து வழிபாடு செய்ய வைத்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், கோவிலை திறந்து சாமி கும்பிட வைத்ததால், வட்டாட்சியருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியின் போது வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகர் மற்றும் காவல்துறையினர், கிராம பொதுமக்கள் உடனிருந்தனர்.