பாபநாசம், மே 26-
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்துள்ள அருந்தவபுரம் ஊராட்சி, உத்தமர் குடியில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ14 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ரேஷன் கடையை பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவா ஹிருல்லா திறந்து வைத்தார். நிகழ்விற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் குமார் தலைமை வகித்தார். ஒன்றியக் கவுன் சிலர் கிருஷ்ணபிரியா முன்னிலை வகித்தார். அருந்தவ புரம் ஊராட்சித் தலைவர் வரவேற்றார். அரசு அதிகாரி கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.