திருச்சிராப்பள்ளி, மார்ச் 8 - திருச்சி மாநகராட்சிக் குட்பட்ட 56 ஆவது வார்டு கரு மண்டபத்தில் தமிழக அரசு நூலகத் துறை சார்பில் பகுதி நேர நூலக திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு கவுன் சிலர் மஞ்சுளா தேவி தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் முகமது அலி பகுதிநேர நூலகத்தை திறந்து வைத்தார். பாரதிதாசன் பல்கலைக் கழக துணை பதிவாளர் (ஓய்வு) வெங்கடேசன், எழுத்தாளர் சீதா ஆகியோர் தலா ரூ.1000-ஐ திருச்சி மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமாரிடம் கொடுத்து, தங்களை நூலக புரவலராக இணைத்துக் கொண்டனர். விழாவில் மைய நூலக அலுவலர் தனலட்சுமி, நூல கர் தனபால், கவிஞர்கள் நந்தலாலா, இமானுவேல், வங்கி அதிகாரி மீனாட்சி நூலக பேராசிரியர் (ஓய்வு) மார்ட்டின் ஆரோக்கியராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.