தஞ்சாவூர், டிச.12- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சி அலுவலக வளாகத்தில், வாகனம் நிறுத் துமிடம் திறப்பு விழா, 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் அகற்றும் டேங்கர் வாகனம் வெள் ளோட்டம் விடும் விழா நடை பெற்றது. விழாவுக்கு பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் தலைமை வகித்தார். பேரூ ராட்சி செயல் அலுவலர் பா. பழனிவேல் முன்னிலை வகித்தார். பேராவூரணி சட்டப் பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார், ரூ.17.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட் டுள்ள வாகன நிறுத்தும் இடத்தை திறந்து வைத்தும், ரூ.26.5 லட்சம் மதிப்பிலான கழிவுநீர் அகற்றும் டேங்கர் வாகனத்தை கொடி யசைத்து துவக்கி வைத்தும், பெயர்ப் பலகையை திறந்து வைத்தும் சிறப்புரையாற்றி னார்.