பாபநாசம், ஏப்.30-
பாபநாசம் அடுத்த திருப்பாலைத்துறை பி.ஏ.டபிள்யூ நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா திறப்பு நிகழ்வு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் தலைமையில் நடைபெற்றது.
பூங்காவை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் திறந்து வைத்தனர்.
பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, துணைத் தலைவர் பூபதி ராஜா, மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் முத்துச்செல்வன், கபிலன், ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.