திருவாரூர், ஜன.29 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் உள்ள குடவாசல் - ஓகை பகுதிக்கான நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் இருப்பதை அந்தப் பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயிகளின் கோரிக்கையை சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி, திருவாரூர் முதுநிலை மண்டல மேலாளரிடம் முன்வைத்தார். கோரிக்கையை அடுத்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. திறப்பு நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி, குடவாசல் நகரச் செயலாளர் டி.ஜி.சேகர், மூத்த தோழர் எப்.கெரக்கோரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிபிஎம் கோரிக்கையை ஏற்று, உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பாட்டுக்கு வர உத்தரவிட்ட, மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.